வேகம் எடுக்கும் மநீம.. பிரச்சாரத்தை துவக்கிய துணை தலைவர் மகேந்திரன்.. விறுவிறுப்பாகும் கோவை
மக்கள் நீதி மய்யம் சார்பில் மகேந்திரன் கோவை தெற்கில் போட்டியிட உள்ளார்
சென்னை: கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட விருப்ப மனு அளித்துள்ளார் மக்கள் நீதி மய்ய துணை தலைவர் டாக்டர் மகேந்திரன்.. இதையடுத்து பிரச்சாரத்தையும் கையோடு துவக்கி விட்டார்.
Recommended Video
தமிழகத்தில் விரைவில் தேர்தல் நடக்க உள்ளது.. அதனால், பல்வேறு கட்சிகள் விருப்ப மனுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு விருப்பமனு அளித்து வருகின்றன.
அந்த வகையில், மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பாக கடந்த 21ம் தேதி முதல் விருப்ப மனு பெறப்பட்டு வருகிறது.. இதையடுத்து மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பாக கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட அக்கட்சியின் துணை தலைவர் டாக்டர் மகேந்திரன் விருப்ப மனு அளித்துள்ளார்.
மேலும், கோவை தெற்கு தொகுதிக்குட்பட்ட பழக்கடை மார்கெட், ரங்கேகவுண்டர் வீதி ஆகிய பகுதியில் தனது தேர்தல் பிரச்சாரத்தையும் துவக்கி உள்ளார்.. தமிழகத்தில் மக்கள் நீதி மையம் ஆட்சி அமைந்தால் என்னென்ன நலத்திட்டங்கள் மக்களுக்கு கொண்டு சேர்க்கப்படும் என்பதையும் அவர் தனது பிரச்சாரத்தின்போது குறிப்பிட்டார்..
மேலும் தொழில்நுட்ப வளர்ச்சியிலும், அறிவியல் அடிப்படையிலும் தமிழகத்தின் வளர்ச்சி மக்கள் நீதி மய்யத்தின் சார்பின் மூலம் இருக்கும் என்பதையும் அவர் அப்போது உறுதிபட கூறினார். தொலைநோக்கு பார்வையுடன் மக்கள் நீதி மையம் சிந்திக்கும் என்பதை அடிப்படையாக வைத்து அனைவரும் இத்தேர்தலில் வாக்களிக்க வேண்டும் என்றும் மகேந்திரன் தன்னுடைய பிரச்சாரத்தின்போது கேட்டுக்கொண்டார்.