நேற்று முன் தினம் போல் இன்றும் சென்னையில் மழை.. பூமியை குளிர்த்த சின்ன சின்ன மழை!
சென்னை: சென்னையில் இன்று மாலை பரவலாக மழை பெய்தது. நேற்று முன் தினம் எல்லா இடங்களில் இல்லாவிட்டாலும் சில இடங்களில் மழை பெய்த நிலையில் தற்போது மீண்டும் மழையால் மக்கள் மகிழ்ந்தனர்.
Recommended Video
தமிழகத்தில் கடந்த சில தினங்களாக வெப்பசலனம், வளிமண்டல கீழடுக்கு சுழற்சியால் மழை பெய்து வருகிறது. அந்த வகையில் இன்றைய தினம் பிற்பகல் முதலே சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.
இதையடுத்து வளசரவாக்கம், போரூர், ராமாபுரம், முகப்பேர், அண்ணாநகர், அமைந்தகரை, கோயம்பேடு உள்பட பல்வேறு இடங்களில் மழை பெய்தது. சுமார் 15 நிமிடங்களுக்கு கனமழை பெய்தது. தாம்பரம், குரோம்பேட்டை உள்பட புறநகர் பகுதிகளிலும் குளிர்ந்த காற்று மழை பெய்தது.
இதனால் சென்னையில் குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது. அலுவலக பணி முடியும் நேரத்தில் மழை வந்ததால் சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இது போல் நேற்று முன் தினமும் திருமுல்லைவாயல், பட்டாபிராம், அம்பத்தூர் மற்றும் அயப்பாக்கம் ஆகிய பகுதிகளில் கடந்த சில மணி நேரங்களாக மழை பெய்தது.
திமுக என்ன இந்து கட்சியா.. பிள்ளையாரை காட்டுவாங்களாம்.. மங்கல இசை முழங்குமாம்.. நெட்டிசன்கள் கலாய்!
சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இரு நாட்களுக்கு மழை பெய்யலாம் என வானிலை மையம் கடந்த 7-ஆம் தேதி அறிவித்தது. மேலும் சில இடங்களில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் அறிவித்தனர். இது போல் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.