சென்னை, புறநகரில் மீண்டும் லேசான மழை.. எந்தெந்த பகுதிகள் தெரியுமா?
Recommended Video
சென்னை: வடகிழக்கு பருவமழை சற்று ஓய்ந்திருந்த நிலையில் சென்னையில் பெரும்பாலான இடங்களில் லேசான மழை பெய்தது.
தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் கிழக்கு திசை காற்றால் கடந்த சில தினங்களுக்கு முன்னர் சென்னை மற்றும் தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் மழை பெய்தது.
கடந்த நவம்பர் 30, டிசம்பர் 1, 2 ஆகிய தேதிகளில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்தது. இதனால் பெரும்பாலான நீர்நிலைகள் நிரம்பி வழிந்தன.
காஞ்சிபுரத்தில் உள்ள கூத்தப்பாக்கம் உள்ளிட்ட ஏரிகள் உடைந்துவிட்டதால் தென்னேரியில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. தாம்பரத்தில் ஒரே நாளில் மழை கொட்டி தீர்த்ததால் அந்த பகுதி முழுவதும் வெள்ளநீரில் தத்தளித்தன.
இந்த நிலையில் டிசம்பர் 3-ஆம் தேதி முதல் மழை படிப்படியாக குறைந்தது. இதையடுத்து இன்று சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மீண்டும் லேசான மழை பெய்து வருகிறது.
வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து சற்று ஓய்ந்த நிலையில் சென்னையில் தாம்பரம், குரோம்பேட்டை, பல்லாவரம், வளசரவாக்கம், சாலிகிராமம், போரூர், ராமாபுரம், அடையாறு, முகப்பேர் மேற்கு, கிழக்கு, அண்ணாநகர் உள்ளிட்ட பகுதிகளில் லேசான மழை பெய்தது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.