தமிழகத்தில் சில மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு.. எங்கெல்லாம் பெய்யும் தெரியுமா?
தமிழகம், புதுச்சேரியில் ஜனவரி 5 ம் தேதி வரை வடகிழக்கு பருவ மழை தொடரும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
சென்னை: தமிழகம், புதுச்சேரியில் ஜனவரி 5 ம் தேதி வரை வடகிழக்கு பருவ மழை தொடரும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் தற்போது வடகிழக்கு பருவமழை முடிந்துள்ளது. நினைத்ததை விட கூடுதலாக ஒரு வாரம் மழை பெய்துள்ளது. வங்கக்கடலில் வீசிய காற்று காரணமாக இந்த மழை கூடுதலாக ஒரு வாரம் நீடித்தது.
கடந்த ஒரு வருடம் முழுக்க நன்றாக மழை பெய்தது. முக்கியமாக நவம்பர் மாதம் நன்றாக மழை பெய்தது. நவம்பர் தொடக்கத்தில் இருந்து டிசம்பர் பாதி வரை தமிழகத்தில் நன்றாக மழை பெய்தது குறிப்பிடத்தக்கது.
டெல்லியில் காகித தொழிற்சாலையில் தீ விபத்து.. ஒருவர் பலி.. தீயணைப்பு வீரர்கள் பெரும் போராட்டம்!
முக்கியமாக வடகிழக்கு பருவமழை நன்றாக மழை பெய்தது. சென்னையில் எதிர்பார்த்ததை விட அதிக அளவில் மழை பெய்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இன்றும் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன்படி தமிழகத்தில் திருவாரூர், தஞ்சாவூர், நாமக்கல், திருநெல்வேலி. தூத்துக்குடி , குமரி, மதுரை, விருதுநகர், ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் இன்று மழை பெய்யும். பெரும்பாலும் மாலை அல்லது மத்திய நேரத்திற்கு பின் மழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
Recommended Video
நேற்று இரவும், இன்றும் கூட சென்னை மற்றும் வடமாவட்டங்களில் காலையில் மழை பெய்தது. சென்னையில் இன்று வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். வட மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பில்லை என்று வானிலை மையம் கூறியுள்ளது.