ஆஹா காலையில் இதமான கிளைமேட்.. மாலையில் லேசான மழை.. இரவில் குளிர்.. வாட் ஏ பியூட்டிஃபுல் சென்னை!
Recommended Video
சென்னை: சென்னையில் பல்வேறு இடங்களில் லேசான மழை பெய்தது. இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக மழையில்லாத நிலையில் தற்போது வெப்பச்சலனம் காரணமாக சென்னை உள்பட புறநகர் பகுதிகளில் மழை பெய்து வருகிறது.
கடந்த ஒரு வாரமாக காலையில் நல்ல கிளைமேட் இருக்கிறது. மாலை நேரங்களில் மழை பெய்த வண்ணம் உள்ளது. இந்த நிலையில் நேற்றைய தினம் ஊட்டி போல் குளிர்ச்சியாக இருந்தது.
இந்த நிலையில் காலையில் லேசான வெயிலுடன் இருந்த நிலையில் மாலை முகப்பேர், நுங்கம்பாக்கம், சேத்துப்பட்டு, ராயப்பேட்டை, அண்ணாநகர், நந்தனம், தேனாம்பேட்டை ஆகிய பகுதிகளில் மழை பெய்தது. இதனால் குளிர்ச்சியாக சூழல் நிலவுகிறது.
கேரளம், கர்நாடகம் ஆகிய பகுதிகளிலும் தென்மேற்கு பருவமழை வலுபெற்றுள்ளது. சென்னையில் மழை வெப்பச்சலனம் மற்றும் தென்மேற்கு பருவமழை காரணமாக பெய்துள்ளது. இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
கேரளத்துக்கு விடுக்கப்பட்ட ரெட் அலர்ட் எச்சரிக்கை இன்னும் திரும்ப பெறப்படவில்லை. இதனால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.