சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

14 மாவட்டங்களில் லேசானது முதல் கனமழை வரை பெய்யும்.. வழக்கம் போல் சென்னையில் வானம் மேகமூட்டம்!

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழையும்
வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், பெரம்பலூர், கடலூர், திருச்சி, கள்ளக்குறிச்சி, கரூர், திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் வட கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக் கூடும்.

Moderate to heavy rain fall in Nilgiris

அடுத்த 48 மணி நேரத்திற்கு நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கன மழையும், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், சேலம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் , வட கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக் கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும்.
அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்ஸியசையும், குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்ஸியசையும் ஒட்டி பதிவாகக்கூடும்.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்ச மழைபெய்த விவரம் (சென்டிமீட்டரில்) தேவலா (நீலகிரி ) 21, நாமக்கல் 13, பென்னாகரம் (தர்மபுரி), அகரம் சிகூர் (பெரம்பலூர்) தலா 8, உளுந்தூர்பேட்டை (கள்ளக்குறிச்சி), கலசப்பாக்கம் (திருவண்ணாமலை), சேந்தமங்கலம் (நாமக்கல்), செய்யார் (திருவண்ணாமலை), வால்பாறை PTO (கோவை), சேந்தமங்கலம் (நாமக்கல்) தலா 7, பூண்டி (திருவள்ளூர்), சின்னக்கல்லார் (கோவை), வேப்பந்தட்டை (பெரம்பலூர்), DSCL சுலங்குறிச்சி (கள்ளக்குறிச்சி), தேன்கனிக்கோட்டை (கிருஷ்ணகிரி), குடியாத்தம் (வேலூர்) தலா 6.

யுஜிசி முடிவும்.. தமிழக அரசின் நிலைப்பாடும்.. அரியர் தேர்வு நடக்குமா? நடக்காதா?... முழு பின்னணி! யுஜிசி முடிவும்.. தமிழக அரசின் நிலைப்பாடும்.. அரியர் தேர்வு நடக்குமா? நடக்காதா?... முழு பின்னணி!

மீனவர்களுக்கான எச்சரிக்கை : செப்டம்பர் 10 முதல்
செப்டம்பர் 14வரை கேரளா, கர்நாடக கடலோரப் பகுதிகள் மற்றும் லட்சத்தீவு பகுதிகளில் பலத்த காற்று 45-55 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும். செப்டம்பர் 10,11 தேதிகளில் தென்மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று 45-55 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

செப்டம்பர் 10-ஆம் தேதி தென்மேற்கு வங்கக்கடல், அந்தமான் கடலோரப் பகுதிகளில் சூறாவளி காற்று 45-55 கிலோமீட்டர் வேகத்தில் வீசக் கூடும். மீனவர்கள் மேற்கண்ட பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென அறிவுறுத்தப்படுகிறார்கள். தென் தமிழக கடலோர பகுதிகளில் குளச்சல் முதல் தனுஷ்கோடி 11.09.2020 இரவு 11.30 மணி வரை கடல் உயர் 3.0 முதல் 3.9 மீட்டர் வரை எழும்பக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

English summary
Chennai Meteorological Department says that moderate to heavy rain will come in Nilgiris.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X