தமிழகத்தில் புயல் பாதித்த முதல் நாளே பிரதமர் மோடி ட்விட்டரில் போட்டுட்டாரு.. சொல்கிறார் தமிழிசை
சென்னை: தமிழகத்தில் புயல் பாதித்த முதல் நாளே பிரதமர் மோடி ட்விட்டரில் பதிவிட்டதாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
ஃபனி புயலுக்காக முன்கூட்டியே மத்திய அரசு நிதி ஒதுக்கியது. அதோடு பிரதமர் மோடி ஒடிசா முதல்வரிடம் புயல் குறித்து கேட்டறிந்ததோடு அது குறித்து டிவிட்டரிலும் பதிவிட்டார்.
இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கட்சிகள் தமிழகத்தை கஜா புயல் தாக்கிய போது பிரதமர் மோடி கண்டுகொள்ளவில்லை என குற்றம்சாட்டின. பிரதமர் மோடி புயல் பாதித்த பகுதிகளை பார்வையிடவில்லை என்றும் விமர்சனம் எழுந்தது.
மே.வங்கம்: மமதா அள்ளப் போகும் முஸ்லீம் வாக்குகள்.. இந்துக்களை வளைத்த பாஜக.. பரிதாப காங், கம்யூ.!
இந்நிலையில் சென்னை விமான நிலையத்தில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு குறித்து அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த தமிழிசை புயல் பாதித்த முதல் நாளே பிரதமர் மோடி டுவிட்டரில் பதிவிட்டதாக தெரிவித்தார்.