2020 ஆம் ஆண்டு இந்தியாவில் அதிகம் தேடப்பட்ட உணவு எது தெரியுமா?.. அய்யோ கேட்டாலே குமட்டுகிறது!
சென்னை: 2020ஆம் ஆண்டு அதிகம் ஆர்டர் செய்யப்பட்ட உணவாக பிரியாணியும் அதிகம் தேடப்பட்ட உணவாக வவ்வால் சூப்பும் இடம்பெற்றதாக உணவு டெலிவரி நிறுவனங்களின் கணக்கெடுப்பு கூறுகிறது.
ஸ்விக்கி, ஜொமாட்டோ என உணவு டெலிவரி நிறுவனங்கள் உள்ளன. இந்த நிறுவனங்கள் ஆண்டுதோறும் இந்தியா அளவில் எந்த உணவு அதிகமாக ஆர்டர் செய்யப்படுகிறது என்பது குறித்து வெளியிடுவார்கள்.
அந்த வகையில் இந்த ஆண்டு மட்டும் 19 லட்சம் பேர் வெஜிடபிள் பிரியாணியை ஆர்டர் செய்ததாக ஜொமாட்டோ நிறுவனம் கூறுகிறது. கடந்த மார்ச் மாதம் கொரோனா பொது முடக்கத்தின் போது உணவு விநியோக நிறுவனங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன.
ஸ்விக்கி
கடந்த மார்ச் 15 முதல் ஏப்ரல் 16-ஆம் தேதி வரை ஜொமாட்டோ வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையானது 46.3 சதவீதத்திலிருந்து 41 சதவீதம் குறைந்ததாக கண்டறியப்பட்டுள்ளது. அது போல் ஸ்விக்கியிலும் 48.8 சதவீதத்திலிருந்து 42.4 சதவீதம் வரை குறைந்துவிட்டதாக கூறுகிறார்கள்.
மோமோக்கள்
இதனால் இந்த நிறுவனங்கள் மளிகை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வழங்கும் சேவையை தொடங்கியது. ஜொமாட்டோ எடுத்த புதிய கணக்கெடுப்பில் டெல்லி, மங்களூரு, புனே ஆகிய நகரங்களில் அதிகமாக ஆர்டர் செய்யப்பட்ட உணவுகளில் மோமோக்கள் முதலிடம் பெற்றுள்ளன. இந்த நகரங்களில் 2.5 மில்லியன் மோமோக்கள் ஆர்டர் செய்யப்பட்டுள்ளன.
வைரஸ்
மோமோக்கள் அதிகம் ஆர்டர் செய்யப்பட்ட நகரங்களில் முதலிடம் டெல்லிக்குத்தான். அது போல் இந்தியாவில் 414 பேர் ஜொமாட்டோவில் வவ்வால் சூப்பை தேடியதாக கூறப்படுகிறது. சீனாவின் வுகானில் வெட் மார்க்கெட்டில்தான் கொரோனா வைரஸ் முதன்முதலில் பரவியதாக சொல்லப்படுகிறது.
பிரியாணி
அதிகம் ஆர்டர் செய்த உணவுகளில் பிரியாணிக்கு முதலிடம். இந்தியாவில் ஒவ்வொரு 20 நிமிடங்களுக்கு ஒரு முறை பிரியாணி ஆர்டர் செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது. அது போல் சிக்கன் பிரியாணியும் அதிகம் பேரால் விரும்பி ஆர்டர் செய்யப்பட்டதாம். ஒவ்வொரு வெஜ் பிரியாணிக்கு சமமாக ஆறு சிக்கன் பிரியாணி ஆர்டர் செய்யப்பட்டதாக ஸ்விக்கி தெரிவித்துள்ளது.