சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கனிமொழி எம்பி ஏன் இப்படி சொல்லி இருக்கிறார்.. அப்பா ஞாபகமா?

கருணாநிதி குறித்து எம்பி கனிமொழி ட்வீட் ஒன்றினை பதிவிட்டுள்ளார்

Google Oneindia Tamil News

Recommended Video

    எம்பி கனிமொழிக்கு அப்பா ஞாபகமா?

    சென்னை: கனிமொழி எம்பி ஏன் இப்படி சொல்லி இருக்கிறார் என்று தெரியவில்லை. "நீ இல்லா நிசப்தம்" என்று கருணாநிதியை பற்றி ட்வீட் போட்டுள்ளார்.

    முதல்வர் மகளாக வளர்ந்தபோதே கனிமொழி பார்த்தது எல்லாமே எமெர்ஜென்சி காலகட்ட நினைவுகள்தான். கைதுகளும், அடக்குமுறைகளும் மழலை கனிமொழியின் மனதில் பதிந்து போன ஒன்று. அரசியல் சூழல் எதுவாக இருந்தாலும் கருணாநிதியின் ஆல் டைம் செல்லம் கனிமொழிதான்!

    எப்பவுமே "கிளாஸ்ல என்னம்மா ரேங்க் என்று கேட்க மாட்டார், இப்போ என்ன புக் படிச்சிட்டு இருக்கிறேம்மா" என்று ஊக்கமும், உத்வேகத்தையும் கொடுத்தான் மகளை வளர்த்தார்.

    சாயங்காலம் 50 ரூபாய் கொண்டு வந்து கொடுத்திடு.. புரியுதா.. லஞ்சம் கேட்ட தாசில்தார்.. சஸ்பெண்ட்!சாயங்காலம் 50 ரூபாய் கொண்டு வந்து கொடுத்திடு.. புரியுதா.. லஞ்சம் கேட்ட தாசில்தார்.. சஸ்பெண்ட்!

    தீவிர அரசியல்

    தீவிர அரசியல்

    என்னதான் அப்பா, மிகப்பெரிய அரசியல்வாதியாக இருந்தாலும், கவிஞர் என்ற அடைமொழியுடன் பல காலம் கனிமொழி காணப்பட்டார். இதற்கு பிறகுதான் தீவிர அரசியலுக்குள் கால்பதித்து நாலாபக்கமும் அறிமுகமானார்.

    மறக்க முடியவில்லை

    மறக்க முடியவில்லை

    கருணாநிதியின் செல்ல மகளாகவே வளர்ந்த கனிமொழி, கவிஞர், மகளிர் அணி தலைவி, எம்பி என்ற பொறுப்பு, பதவிகளை அடைந்து தமிழகத்தின் முக்கிய தலைவராக உயர்ந்துவிட்டாலும், தொலைந்து போன பழைய நினைவுகளை இவரால் இன்னமும் மறக்க முடியவில்லை போலும்!

    அப்பா நினைவு

    தனது ட்விட்டரில் கருணாநிதி பற்றின ஏதாவது தகவல்கள், நினைவுகளை அடிக்கடி சொல்லி கொண்டே இருக்கிறார். மனசில் எப்போதெல்லாம் கவலை, வெறுமை, வருகிறதோ அப்போதெல்லாம் கனிமொழி பதிவிடுவது தன் அப்பாவை நினைவுகளைதான்.

    கன்னத்தை கிள்ளுகிறார்

    கன்னத்தை கிள்ளுகிறார்

    இப்போதுகூட ஒரு போட்டோ போட்டுள்ளார். அதில் கருணாநிதி, மகளின் கன்னத்தை பிடித்து செல்லமாக கிள்ளி கொஞ்சுகிறார். இதை பக்கத்தில் இருந்து ராஜாத்தி அம்மாளும், துரைமுருகனும் பார்த்து ரசிக்கிறார்கள். இந்த போட்டோவுக்கு கீழே, "நீ இல்லா நிசப்தம்" என்ற ஒற்றை வார்த்தையை பதிவிட்டுள்ளார்.

    நிசப்தம்

    நிசப்தம்

    திடீரென்று கனிமொழி இப்படி சொல்ல என்ன காரணம்? நிசப்தம் என்று சொல்லுகிறாரே.. அந்த நிசப்தம் அரசியலிலா? தன் குடும்பத்திலா? தன் மனசிலா? அல்லது இந்த உலகிலா? என்று தெரியவில்லை. கனிமொழிக்கு அப்பா ஞாபகம் அதிகமாகி விட்டது என்று மட்டும் நம்மால் உணர முடிகிறதே தவிர.. நிசப்தம் எங்கே என்று கனிமொழிக்கு மட்டுமே தெரிந்த ரகசியம்!

    English summary
    MP Kanimozhi tweet is "Nee Illa Nisaptham" wordings with Karunanidhi Photo
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X