நடுராத்திரி அலறிய கவர்ச்சி நடிகை மாயா.. வீட்டு வாசலில் மர்ம நபர்களின் அட்டகாசம்.. சென்னையில்!
கவர்ச்சி நடிகை மாயாவின் கார் கண்ணாடியை மர்ம நபர்கள் உடைத்துள்ளனர்
சென்னை: கவர்ச்சி நடிகை மாயா வீட்டின் கார் கண்ணாடியை யார் உடைத்தார்கள் என்று தெரியவில்லை.. இது சம்பந்தமாக சாலிகிராமம் போலீசார் கண்டுபிடித்து வருகிறார்கள்.
சென்னை சாலிகிராமம் புஷ்பா காலனியை சேர்ந்தவர் மாயா 60 வயதாகிறது.. அந்தக்கால சினிமா கவர்ச்சி நடிகை இவர். பிரபல கவர்ச்சி நடிகை பாபிலோனா இவரது பேத்தி.
கடந்த 2014-ம் ஆண்டு, மறைந்த ஜெயலலிதா கைது செய்யப்பட்டபோது, "அம்மா வாழ்க. அம்மாவை விடுதலை செய்ய வேண்டும்' என கோஷமிட்டபடியே சாலையின் நடுவில் சென்று மாயா படுத்து கொண்டு, போலீஸ் கமிஷனர் ஆபீஸ் முன்பு தீக்குளிக்க முயன்று பரபரப்பை ஏற்படுத்தியவர்தான் மாயா.
மாயா, தனது காரை வழக்கமாக வீட்டின் முன்புதான் நிறுத்துவராம்.. அப்படித்தான் வேகன் ஆர் காரை இரவும் நிறுத்தி வைத்திருந்தார். திடீரென பயங்கர சத்தம் கேட்டது... இதனால் மாயா உட்பட குடும்ப உறுப்பினர்கள் அனைவருமே அதிர்ச்சி அடைந்து வெளியே வந்து பார்த்தனர்.
கொரோனா - ஆம்புலன்ஸ் டிரைவர்,நர்ஸ் வேலைக்கு ஆட்கள் தேவை - உடனே அப்ளை பண்ணுங்க
அப்போது, மர்ம நபர்கள் சிலர் தப்பி ஓடுவது தெரிந்தது.. அங்கிருந்த காரின் முன் மற்றும் பின்பக்க கண்ணாடிகள் அடித்து நொறுக்கப்பட்டிருந்தது... இதை பார்த்து செய்வறியாமல் மாயா தவித்தார். உடனடியாக விரும்பாக்கம் ஸ்டேஷனில் புகார் அளித்தார்.
போலீசாரும் சம்பவ இடத்திற்கு வந்து சிசிடிவி பதிவுகளின்படி விசாரணை நடத்தி வருகின்றனர். வேண்டுமென்றே யாரேனும் கார் கண்ணாடியை உடைத்து சென்றார்களா என்ற கோணத்தில் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடந்த மே மாதம் மாயாவின் மகன் விக்னேஷை மர்ம நபர்கள் அரிவாளால் வெட்டிய சம்பவமும் நடந்திருந்தது.. அதனால், முன்விரோதம் காரணமாக கண்ணாடியை உடைத்தார்களா என்ற கோணத்திலும் விசாரணை நடக்கிறது. இந்த சம்பவத்தால் சாலிகிராமம் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.