நாம் தமிழர் கட்சிக்கு முதல் வெற்றி.. தென்கோடி குமரி மாவட்டத்தில் அசத்திய சுனில்
சென்னை: ஊரக உள்ளாட்சி தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு முதல் வெற்றி கன்னியாகுமரி மாவட்டத்தில் கிடைத்துள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம், ராஜாக்கமங்கலம் ஊராட்சி ஒன்றியத்தில், 11வது வார்டில், நாம் தமிழர் கட்சி சார்பில், விவசாயி சின்னத்தில், போட்டியிட்ட, நெ.சுனில், என்பவர் வெற்றி பெற்று கவுன்சிலராக தேர்வாகியுள்ளார்.
அதிமுக வேட்பாளர் சிலுவைதாசனை விட 218 வாக்குகள் அதிகம் பெற்று சுனில் வெற்றி பெற்றார்.
இரவு 10.30 மணி அளவிலான நிலவரப்படி, மாவட்ட கவுன்சிலர் பதவியிடங்களில் 150 இடங்களில் அதிமுக, 173 இடங்களில் திமுக முன்னிலை வகித்து வந்தன. அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் ஒரு இடத்தில் முன்னிலை வகித்தது.
நாம் தமிழர் கட்சியின் முதல் தேர்தல் வெற்றி:-
— நாம் தமிழர் கட்சி (@NaamTamilarOrg) January 2, 2020
நாம் தமிழர் கட்சி சார்பாக விவசாயி சின்னத்தில் போட்டியிட்டு கன்னியாகுமரி மாவட்டம், ராஜாக்கமங்கலம் ஊராட்சி ஒன்றியத்தின் 11வது வார்டு கவுன்சிலராக வெற்றி பெற்றுள்ள நெ.சுனில் அவர்களுக்கு புரட்சி வாழ்த்துகள்.
- நாம் தமிழர் கட்சி pic.twitter.com/KzcC10rSau
ஒன்றிய கவுன்சிலர்கள் பதவி இடங்களை பொருத்தளவில், திமுக 1177 இடங்களிலும், அதிமுக 937 இடங்களிலும் முன்னிலை அல்லது வெற்றி பெற்றுள்ளனர்.
சென்னை உட்பட 5 நகரங்களில் டிஆர்டிஓ ஆய்வகம் துவக்கம்.. 35 வயதுக்கு கீழுள்ளவர்கள் மட்டுமே விஞ்ஞானிகள் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் 50 பதவி இடங்களில் முன்னிலை வந்தது. இந்த நிலையில்தான் நாம் தமிழர் கட்சிக்கு கிடைத்துள்ள இந்த முதல் வெற்றி கட்சி தொண்டர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.