பெரம்பூரில் நாம் தமிழர் கட்சி முகவரை துணை ராணுவத்தினர் தாக்கியதால் கால்முறிவு.. கட்சியினர் போராட்டம்
சென்னை: சென்னை பெரம்பூரில் உள்ள ஒரு பூத்தில் நாம் தமிழர் கட்சியினரை துணை ராணுவத்தினர் தாக்கியதால் கால்முறிவு ஏற்பட்டு கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
சென்னை பெரம்பூரில் உள்ளது பெரியார் நகர் வாக்குச் சாவடி. இங்கு பூத் முகவராக உள்ள நாம் தமிழர் கட்சியினர் உணவு கொடுப்பதற்காக உள்ளே சென்றார்.
அப்போது துணை ராணுவத்தினர் அவரை தடுத்தனர். எனினும் அவர் உணவு கொடுப்பதற்காக செல்கிறேன் என கூறிவிட்டு சென்றார். அப்போது அந்த முகவர் மீது துணை ராணுவ காவலர் தாக்கியதாக கூறப்படுகிறது.
இதனால் அந்த முகவரின் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுவிட்டது. இதையடுத்து அந்த பூத்தை முற்றுகையிட்ட நாம் தமிழர் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
Comments
English summary
Naam Tamilar party protest in Chennai Perambur as paramilitary attacks party's booth agent.