இனி.. யாராவது நம்மை சிறுபான்மைன்னு சொன்னால் செருப்பாலயே அடிக்கணும்.. சீமான் ஆவேசம்
சிறுபான்மையினர் என்று இனி யாரும் நம்மை சொல்ல கூடாது
சென்னை: "நாங்களா சிறுபான்மை? சுப்பிரமணிய சாமி சிறுபான்மை.. எச்.ராஜா சிறுபான்மை.. எஸ்வி சேகர் சிறுபான்மை.. இவர்கள்தான் சிறுபான்மை... இனிமேல் யாராவது நம்மை சிறுபான்மைன்னு சொன்னால் செருப்பாலயே அடிக்கணும்" என்று சீமான் கடுமையாக சீறி கருத்துக்களை முன் வைத்துள்ளார்.
குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிராக நம் தமிழர் கட்சி ஓருங்கிணைப்பாளர் சீமான் பல்வேறு இடங்களில் பேசி வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் நடந்த கூட்டத்தில் டிரம்ப் வருகையை விமர்சித்து பேசியிருந்தார். அதன் சுருக்கம்தான் இது:
"எங்ககிட்ட குடியுரிமைக்கு சான்று இல்லை.. அப்படியே இருந்தாலும் நான் காட்ட மாட்டேன்.. நான் முகாமுக்கு தயாராயிட்டேன்.. பெட்டி படுக்கை எல்லாம் கட்டி ரெடியா வெச்சிட்டேன்.. என்கூட சேர்ந்து நீங்களும் வந்தால் எல்லாரும் போய் ஒன்னா மகிழ்ச்சியா இருக்கலாம்.. என்ன ஒரே வித்தியாசம், இப்போ திறந்த வெளியில இருக்கோம்.. அப்போ கம்பிக்கு உள்ளே இருப்போம்.. தட்ஸ் ஆல் யுவர் ஆனர்.
சிறுபான்மை
ஒரு மாற்றமும் நிகழ போவது இல்லை... மதத்தை வைத்து மானுடத்தை பிரிப்பது மாதிரி ஒரு கொடுமை மானுடத்தில் இருக்கா? எத்தனை ஆண்டு காலம் இவர்கள் சிறுபான்மை, சிறுபான்மை என்று சொல்லி சொல்லியே பயப்படுத்தி, ஒரு குற்றவாளிகள் போல வெச்சிருக்காங்க.. அச்சத்தை நீங்க எல்லாரும் கைவிடுங்க.. அஞ்சுவதும் அடிபணிவதும் நமக்கு என்னைக்குமே கூடாது.
எச்.ராஜா
இந்த நாடு நம்முடையது.. நான் உங்களோட இருப்பேன், நீங்க என்னோட இருப்பீங்க, நாடு நம்மோட இருக்கும்.. எல்லாரும் தைரியமா இருங்க முதல்ல.. திரும்ப திரும்ப சொல்றேன், இஸ்லாமியர்கள் நாங்கள் தமிழராக ஆகவில்லை.. தமிழர்கள் நாங்கள்தான் இஸ்லாத்தை ஏற்றிருக்கிறோம்.. நாங்களா சிறுபான்மை? சுப்பிரமணிய சாமி சிறுபான்மை.. எச்.ராஜா சிறுபான்மை.. எஸ்வி சேகர் சிறுபான்மை.. இவர்கள்தான் சிறுபான்மை.
ஜெயலலிதா
ஐயா ரஜினிகாந்த் சிறுபான்மை.. அவர் மராட்டியர், ஒத்த வீட்டுக்காரர்.. இதெல்லாம் உங்களுக்கே சிரிப்பா இல்லையா? நீங்க இப்படித்தான் எம்ஜிஆரையும் சிறுபான்மையினர்ன்னு நம்பிட்டீங்க.. அவர் ஒரு மேனன்.. மலையாளி.. அவர் சாதி சொல்லியிருந்தா இங்க ஒரு வார்டு கவுன்சிலரா கூட வந்திருக்க முடியாது.. இதேதான் கருணாநிதி அவர்களும்... இதேதான் ஜெயலலிதா அம்மையாரும்.. ஆனா நீங்க தான் இவங்களை நம்பினீங்க.
உரிமை இது
ஆனால் இனிமேல் யாராவது நம்மை சிறுபான்மைன்னு சொன்னால் செருப்பாலயே அடிக்கணும்.. சலுகைக்காகவா இப்படி சிறுபான்மைன்னு சொல்லிக்கிறது? ஐயோ.. உங்களுக்கு வேண்டியது சலுகையா, உரிமையா? என்ன சலுகை கிடைச்சிடுச்சு சொல்லு.. வக்ஃபு வாரியத்துல தலைவரா போடுவாங்க.. மொத்த இஸ்லாமியரை வாங்கிட்டு 3 சீட் தருவான்.. நானும் 5 சீட் தந்தேன்.. எனக்கு தெரியும் என்ன நடக்கும்னு.
இளையராஜா
எனக்கு நீ ஓட்டு போட்டா போடு... போடாட்டி போ.. இது என் பிறவி கடன். நான் வாக்குக்கானவன் இல்லை.. வாழ்வுக்கானவன்.. இளையராஜா பெரும்பான்மை, அவர் மகன் யுவன்சங்கர் ராஜா சிறுபான்மை.. இதெல்லாம் உங்களுக்கே வேடிக்கையா இல்லையாப்பா.. ஏஆர் ரஹ்மான் சிறுபான்மை, அவர் அக்கா மகன் இருக்கார் இல்லையா ஜிவி பிரகாஷ் அவர் சிறுபான்மை... என்னங்கடா உங்க கணக்கு.. சீ.. சீ.. இது மாதிரி ஒரு கேவலம் உலகத்துல கிடையாது.. மதத்தை வைத்து மனிதனை அடையாளப்படுத்துவது உலக வரலாற்றில் கிடையாது." என்றார்.