அணைகளை இயக்குவதில் மாநில அரசுக்கு முழு அதிகாரம் வேண்டும் - மத்திய அரசிடம் முதல்வர் கோரிக்கை
நடந்தாய் வாழி காவேரி திட்டத்தை செயல்படுத்த அனுமதி தர வேண்டும் என்று மத்திய ஜல்சக்தி அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்திடம் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கோரிக்கை வைத்துள்ளார்.
சென்னை: தமிழகத்தின் விவசாயம் மற்றும் குடிநீர் ஆதாரமாக காவிரி ஆறு விளங்குகிறது. நமாமி கங்கை திட்டம் போல், காவிரிக்கும் சிறப்பு திட்டம் வகுக்க மத்திய அரசுக்கு முதல்வர் பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.
அணைகளை இயக்குவதில் மாநில அரசுக்கு முழு அதிகாரம் வழங்கப்பட வேண்டும் எனவும் அணை பாதுகாப்பு சட்டத்தில் திருத்தம் கொண்டு வர வேண்டும் எனவும் மத்திய நீர்வள அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்துடன் நடந்த ஆலோசனைக்கூட்டத்தில் முதல்வர் தெரிவித்துள்ளார்.
நதிகள் இணைப்பது தொடர்பாக மத்திய ஜல்சக்தி அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்துடன் இன்று காலை முதல்வர் பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டார். அந்த ஆலோசனை கூட்டத்தில், காவிரி கோதாவரி ஆறுகளை இணைப்பது குறித்து காணொளி மூலம் ஆலோசனை நடைபெற்றது.
அப்போது மத்திய அமைச்சரிடம் பேசிய முதல்வர், நடந்தாய் வாழி காவேரி திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு அனுமதி தர வேண்டும் என கோரிக்கை வைத்தார். பெண்ணையாற்றின் குறுக்கே அணை கட்ட அனுமதி அளிக்க கூடாது என்றும் அணைகளை இயக்குவதில் மாநில அரசுக்கு முழு அதிகாரம் வழங்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தினார். அணை பாதுகாப்பு சட்டத்தில் திருத்தம் கொண்டு வரவும் மத்திய ஜல்சக்தித்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் உடனான ஆலோசனையில் முதல்வர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு கொரோனா.. சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை