ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.க்களுக்கு டஃப் கொடுக்கும் தமிமுன் அன்சாரி எம்.எல்.ஏ...!
சென்னை: நாகை மாவட்டத்தில் அரசு திட்டங்களை கேட்டுப்பெறுவதில் ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.க்களுக்கு டஃப் கொடுக்கிறாராம் தமிமுன் அன்சாரி எம்.எல்.ஏ..
நாகை மாவட்டத்தில் சீர்காழி, மயிலாடுதுறை, வேதாரண்யம், நாகை, பூம்புகார், கீழ்வேளூர் ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன.
இதில் வேதாரண்யம் தொகுதியில் வெற்றிபெற்ற ஓ.எஸ்.மணியன் அமைச்சராக உள்ளார். நாகை தொகுதியில் அதிமுக கூட்டணியில் போட்டியிட்டு வென்ற தமிமுன் அன்சாரி உறுப்பினராக உள்ளார்.
கெட்டிக்காரத்தனம்
மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் அதிமுக கூட்டணியில் வெற்றிபெற்ற தமிமுன் அன்சாரி எம்.எல்.ஏ., தனது தொகுதிக்கு அரசுத்திட்டங்களை கேட்டுப்பெறுவதில் கெட்டிக்காரத்தனமாக செயல்படுகிறாராம்.
கடனாளி ஆக்காமல் நீக்கியதற்கு நன்றி...வைகோவை விமர்சித்து போஸ்டர்
அடிக்கடி விசிட்
ஊரில் இருந்தால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு அடிக்கடி செல்லும் தமிமுன் அன்சாரி எம்.எல்.ஏ. முதல்வர் அறிவித்த எந்தவொரு திட்டமாக இருந்தாலும், அதனை நாகையில் முதலில் செயல்படுத்துங்கள் என அதிகாரிகளை விடுவதில்லையாம். அவர்களோ அமைச்சர் தொகுதியான வேதாரண்யத்திற்கு முன்னுரிமை தருவதா, தமிமுன் அன்சாரிக்கு முன்னுரிமை தருவதா என புலம்புகிறார்களாம்.
மத்தளத்திற்கு இரு பக்கம்
அமைச்சர் தொகுதியான வேதாரண்யத்தையும், ஆளுங்கட்சி எம்.எல்.ஏக்களின் தொகுதியையும் விட்டுவிட்டு நாகைக்கு முன்னுரிமை அளித்தால் அவர்களது கோபத்திற்கு ஆளாக நேரிடும், தமிமுன் அன்சாரியோ நேரடியாக முதலமைச்சரிடமே முறையிடுவேன் என்கிறார், இதனால் மத்தளத்துக்கு இரண்டு பக்கமும் அடி என்பது போல் உள்ளோம் என அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.
முதல்வரின் ஆதரவு
இதனிடையே நாகை தொகுதியில் மட்டும் இதுவரை 222 குளங்கள் குடிமராமத்துப் பணிகளின் கீழ் தூர்வாரப்பட்டுள்ளது. மேலும், 100 குளங்களை தூர் வார கோருகிறாராம் தமிமுன் அன்சாரி. கருணாஸ், தமிமுன் அன்சாரி, தனியரசு ஆகியோருக்கு முதலமைச்சரின் ஆதரவு உள்ளதால் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் மெல்லவும் முடியாமல், சொல்லவும் முடியாமல் கட்சியினரிடையே தவிக்கிறாராம்.