பொள்ளாச்சி விவகாரம்: வரும்.. உண்மை விரைவில் வெளியே வரும்.. உற்சாகமாக பேட்டி கொடுத்த நக்கீரன் கோபால்
Recommended Video
சென்னை: பொள்ளாச்சி விவகாரத்தில் விரைவில் உண்மை வெளியே வரும் என நக்கீரன் கோபால் பேட்டி கொடுத்துள்ளார்.
பொள்ளாச்சியில் 200-க்கும் மேற்பட்ட பெண்களை காதல் வலையில் விழவைத்து பாலியல் பலாத்காரம் செய்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பாக நக்கீரன் கோபால் புலனாய்வு நடத்தி ஒரு ஆடியோவை வெளியிட்டார்.
அந்த ஆடியோவில் தன்னை பலாத்காரம் செய்ய வரும் ஒருவனிடம் அந்த பெண் தன்னை விட்டுவிடுமாறு கெஞ்சியும் விடாமல் அந்த மிருகம் வேட்டையாடியதால் அந்த பெண் அலறும் காட்சி பெண்களை பெற்றவர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
28 ஆண்டுக்கு பிறகு தென்காசியில் திமுக போட்டி.. முயற்சி வீண் போகுமா?.. எக்சிட் போல் சொல்வது என்ன?
சோதனை
இந்த நிலையில் இதுதொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் முக்கிய குற்றவாளியான திருநாவுக்கரசுவின் வீட்டில் சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
நக்கீரன் கோபால்
இந்த வழக்கில் தொடர்புடையவர்களின் விவரங்கள் சிபிஐ போலீஸாருக்கு கிடைத்ததாக தகவல்கள் எழுந்தன. இந்த நிலையில் சென்னை பெசன்ட் நகர் ராஜாஜி பவனில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் நக்கீரன் ஆசிரியர் கோபால் இன்று ஆஜரானார்.
சிபிஐ
அப்போது அவர் அந்த விவகாரம் தொடர்பாக சாட்சியம் அளித்து விட்டு வெளியே வந்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் நாங்கள் வெளியிட்ட ஆவணங்களை சிபிஐயிடம் சமர்ப்பித்தோம்.
உண்மை வரும்
இந்த வழக்கு தொடர்பான சாட்சியத்தை நான் அளித்துவிட்டு வந்தேன். எனவே இந்த விவகாரத்தில் உண்மை வெகு விரைவில் வெளியே வரும் என நக்கீரன் கோபால் தெரிவித்தார்.