சாமி இல்லை.. அதனால்தான் சாத்தான்கள் உலா வருகின்றன.. தினகரன் மீது பாயும் "அம்மா"
டிடிவி தினகரனை விமர்சித்து நமது அம்மா நாளிதழ் கட்டுரை வெளியிட்டுள்ளது.
சென்னை: ஜெயலலிதா என்னும் சாமி இல்லாத குறை இருப்பதால்தான் உங்களை போன்ற சாத்தான்கள் உலா வர காரணமாகி விட்டதாக டிடிவி தினகரனை நமது அம்மா நாளிதழ் கடுமையாக விமர்சித்துள்ளது.
சமீப காலமாகவே நமது அம்மா நாளிதழுக்கும் டிடிவி தினகரனுக்கும் முட்டல் மோதலாகவே இருந்து வருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு நமது அம்மா இதழை "நமது பாட்டி" என்று டிடிவி தினகரன் சொல்ல, அதற்கு கொதித்தெழுந்த அதிமுகவினர், "அம்மாவின் திருப்பெயரை பாட்டி என்று பழிப்பதா? 10 வருடம் அரசியலில் ஒதுக்கி வைத்தமைக்கு மறைந்த பிறகும் "அம்மா"வை பழிவாங்க முற்படும் தினகரனே மன்னிப்பு கேள்" என கண்டனம் தெரிவித்திருந்தது.
டிடிவி கருத்து
தற்போது அடுத்த விவகாரம் ஆரம்பித்துள்ளது. சர்கார் படம் குறித்து டிடிவி தினகரன் கருத்து தெரிவித்திருந்தார். அதில், "அம்மா இருந்தபோது இந்த படத்தை எடுத்திருந்தால் அவர்களை வீரர்களாக கருதலாம்.. மறைந்த தலைவர்களைப் பற்றி இதுபோன்று எல்லாம் படம் எடுப்பது நாகரிகமா?" என்று கேள்வி எழுப்பி விமர்சித்திருந்தார்.
அம்மா நாளிதழ்
டிடிவி தெரிவித்திருந்தது சர்க்கார் படத்தை பற்றின தன் கருத்தைதான். ஆனால் அம்மா நாளிதழோ டிடிவியை சாடி உள்ளது. " சாமி இல்லாத குறையால் சாத்தான் போடுது ஆட்டம்..."என்கிற தலைப்பில் ஒரு கட்டுரையும் வெளியிட்டுள்ளது.
மிஸ்டர் திகார்
அந்த கட்டுரையில், "வாஸ்தவம் தான் மிஸ்டர் திகார்... நீங்க கூட அம்மா உயிரோடு இருந்திருந்தா இப்படி ஆமமூக்கன் கட்சின்னு ஆரம்பிச்சு அம்மா உயிருருக ஊரெல்லாம் பிரச்சாரம் செய்து செயிக்க வச்ச பதினெட்டு பேரு பதவியை ‘பனால்' ஆக்கி விட்டிருப்பீங்களா..?
துணிச்சல் வருமா?
அதேபோல அம்மா உயிரோடு இருந்திருந்தா பசும்பொன்னுக்கு போய் அம்மா பேனரை ஆள் வைச்சு கிழிக்கிற திமிரு உங்களுக்கு வந்திருக்குமா..? அது மட்டுமா அம்மா உயிரோடு இருந்திருந்தா அம்மாவை பாட்டி, கொள்ளுபாட்டின்னு கேலி கிண்டல் பண்ணுற துணிச்சல் உங்களுக்கு வந்திருக்குமா..? அதையெல்லாம் விடுங்க அம்மா மட்டும் உயிரோடு இருந்திருந்தா பாண்டிச்சேரியில் உள்ள பதுங்கு குழியை விட்டுத்தான் நீங்க வெளியே வந்திருப்பீங்களா..?
சாமி இல்லாத குறை
என்ன பண்றது எல்லாம் அந்த ஒரு சாமி இல்லாத குறைதான் உங்களைப்போல இத்தனை சாத்தான்கள் உலா வர காரணமாப்போச்சே" இவ்வாறு அந்த கட்டுரை வெளியாகி உள்ளது. இதற்கு டிடிவி எனன் பதில் சொல்ல போகிறாரோ? பார்ப்போம்!