ஃபெரா மோசடியும், பெட்டைத்தன அரசியலும்.. தினகரனை வெளுத்து வாங்கிய நமது அம்மா!
டிடிவி தினகரனை நமது அம்மா நாளிதழ் கடுமையாக விமர்சித்துள்ளது
Recommended Video
சென்னை: சசிகலா ஜெயிலில் இருந்து வெளியே வந்தாலும், இனிமேல் அதிமுகவில் தினகரன் இணைய வாய்ப்பே இல்லை என்பது உறுதியாகிவிட்டது. இன்றைக்கு அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளிதழான நமது அம்மாவில் தினகரனை கிழித்து தொங்க விட்டுள்ளார்கள்.
கட்சி உடைந்ததில் இருந்தே கொஞ்சம் அடக்கி வாசித்த அதிமுக தரப்பு, கடந்த ஓராண்டாகத்தான் டிடிவி தினகரனை துணிந்து எதிர்க்க ஆரம்பித்தனர். சரமாரியாக விமர்சிக்கவும் தொடங்கினர்.
இப்போது முக்கிய நிர்வாகிகள் அமமுகவில் இருந்து வெளியேறவும், இந்த விமர்சனம் எல்லை மீறி வருகிறது. ஆரம்பத்தில் இருந்தே திமுகவுடன் தினகரனுக்கு ஒரு மறைமுக கூட்டு இருக்கிறது என்று அதிமுக தரப்பில் சொல்லப்பட்டு வருகிறது.
"அன்னிய செலாவணி மோசடி வழக்கில், திமுகவின் தயவால் தினகரன் வழக்கை திரும்ப பெற முயற்சித்தார், ஜெயலலிதாவை சிக்க வைத்து விட்டார், இந்த மனஉளைச்சலால்தான் அம்மா இறந்துவிட்டார், செந்தில் பாலாஜி, கலைராஜனை திமுகவுக்கு அனுப்பிய ஸ்ஃலீப்பர் செல்தான் தினகரன்" இவைதான் அதிமுக இந்த 3 ஆண்டு காலங்களில் விமர்சித்த வார்த்தைகள்.
இதை குறிப்பிட்டுதான் இன்றைய நமது அம்மாவும் தினகரனை விமர்சித்துள்ளது. கவிதை நடையில் "ஃபெரா தனமும், பெட்டைத்தனமும்" என்ற தலைப்பில் அமைந்துள்ள அந்த காரசார பதிவு இதுதான்: