சமூக வலைதளங்களில் வைரலான ஆபாச வீடியோ....நாஞ்சில் சம்பத் விளக்கம்
Recommended Video
சென்னை: சமூக வலைதளங்களில் தமது பெயரில் வைரலாக பரவி வரும் ஆபாச வீடியோ குறித்து இலக்கியப் பேச்சாளர் நாஞ்சில் சம்பத் விளக்கம் அளித்துள்ளார்.
சமூக வலைதளங்களில் நாஞ்சில் சம்பத் பெயரில் ஒரு ஆபாச வீடியோ வலம் வருகிறது. அதில் இளம் பெண் ஒருவருடன் ஒரு நபர் உல்லாசமாக இருக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
இது தொடர்பாக நாஞ்சில் சம்பத் தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:
என் உறவுகளுக்கு... pic.twitter.com/XdpmrXez2c
— Nanjil Sampath (@NanjilPSampath) September 28, 2019
என் எச்சிலை மைய்யாக்கி எழுதியவர்களை தாண்டித்தான் இந்த உயரத்திற்கு வந்துருக்கிறேன். ஏனோ தானோ பேர்வளிகள் என்னை அழுக்காக்கி அசிங்க்கப்படுத்தலாம் என்று கருதுகிறார்கள்.
வெளியூர் நபருக்கு சீட் கொடுத்தது ஏன்? நாங்குநேரி தேர்தலால் காங்கிரஸில் குழப்பம்.. என்ன நடக்கிறது?
அவர்கள் கருதுவது கை கூடாது; சங்கு சுட்டாலும் வெண்மை தரும். சோதனைகள் வந்தாலும் என் சுய மரியாதைக்கு பங்கம் வராமல் எப்போதும் நடப்பேன்.
மானமும் மரியாதையும் என் மரபணுவோடு கலந்தது. புரிந்தவர்களுக்கு புரிந்தால் செரி. இவ்வாறு நாஞ்சில் சம்பத் விளக்கம் தந்துள்ளார்.