அதிமுகவுக்கு 4 சீட்தான் கிடைக்கும்... ஒபிஎஸ் தர்மயுத்தம் 2.0ஐ விரைவில் தொடங்குவார்.. நாஞ்சில் சம்பத்
சென்னை: வரும் சட்டமன்ற தேர்தலில் அதிமுக வெறும் நான்கு தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெறும் என்று நாஞ்சில் சம்பத் தெரிவித்துள்ளார்.
Recommended Video
தமிழ்நாட்டின் முக்கிய பேச்சாளர்களில் ஒருவர் நாஞ்சில் சம்பத். அரசியல் மேடைகளில் இவரது பேச்சில் அனல் கக்கும், மிகப் பெரிய கூட்டத்தைக் கூட பல மணி நேரம் வரையிலும்கூட தனது பேச்சைக் கேட்க வைக்கும் திறமை கொண்டவர் நாஞ்சில் சம்பத்.
திமுகவில் தனது அரசியல் பயணத்தைத் தொடங்கிய இவர், பின்னர் மதிமுக, அதிமுக, தினகரன் அணி என பல கட்சிகளுடனும் இணைந்து பணியாற்றியுள்ளார். நாஞ்சில் சம்பத் ஒன் இந்தியா தளத்திற்கு அளித்த நேர்காணலில் தான் பிறந்ததும், வளர்ந்ததும் திமுகவில்தான் என்றும் வைகோவிற்காக கலகம் செய்துவிட்டு திமுகவில் இருந்து வெளியேறினேன் என்றும் தெரிவித்தார்.
அதன் பின், அதிமுகவில் வேறு வழியின்றி அகதியைப் போல சேர்ந்ததாகவும் தெரிவித்தார். இருப்பினும், அக்கட்சியிலிருந்து விலகிய பின்னரும்கூட பெரியார், அண்ணா குறித்துப் பேசி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். மேலும், தான் எப்போதும் திராவிட இயக்கத்தைச் சேர்ந்தவன் என்றும் அவர் குறிப்பிட்டார்.
அதிமுக விரைவில் உடைய போகிறது என்று குறிப்பிட்ட அவர் துணை முதல்வர் ஓபிஎஸ் விளம்பரங்களில் முதல்வர் இபிஎஸ் இடம் பெறுவதில்லை என்றார். அதேபோல எடப்பாடி பழனிசாமி தரும் அரசு விளம்பரங்களில் துணை முதல்வர் ஓபிஎஸ் இடம்பெறுவதில்லை என்றும் விரைவில் ஓபிஎஸ் தர்மயுத்தம் 2.0ஐ தொடங்கவுள்ளார் என்றும் தெரிவித்தார்.
போர்க்கொடி தூக்கும் சசிகலாவின் 'கார்' கொடி! கழகத்தில் வருமா கலகம்? பா. கிருஷ்ணன்
திமுக தலைவர் ஸ்டாலின் குறித்துப் பேசிய அவர், "அண்ணாவுக்கு அன்று காங்கிரஸ் மட்டுமே எதிரி, கருணாநிதிக்கு அதிமுக மட்டுமே எதிரி. ஆனால் இன்று சங்க பரிவாரில் தொடங்கி பெருநிறுவனங்கள் வரை அனைவரும் ஸ்டாலின் மீத படைதொடுகிறார். இந்த போரை ஸ்டாலின் மட்டுமே வெல்வார்" என்றார்.
அதேபோல அதிமு வரும் சட்டமன்ற தேர்தலில் வெறும் நான்கு தொகுதிகளில் மட்டுமே வெற்றிபெறும் என்றும் மற்ற தொகுதிகளில் திமுக கூட்டணியே வெல்லும் என்றும் அவர் கூறினார். ரஜினி ரசிகர்களின் ஆதரவு திமுகவுக்குத் தான் இருக்கும் என்று தெரிவித்த அவர், கமல் அரசியலையும் சினிமா போலவே பார்க்கிறார் என்றும் தெரிவித்தார். மேலும், திமுகவில் அதிகாரப்பூர்வமாக இணையும் எண்ணம் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.