"நிரூப்- பிரியங்கா செய்றது தவறுங்க.. அர்ஜுன் மாதிரி கமல் கண்டிக்கணும்.. நோ வழவழா நோ கொழ கொழா!"
சென்னை: பிரியங்காவும் நிரூப்பும் கண்களாலேயே பேசிக் கொள்கிறார்கள் என்பதால் பார்க்கும் பார்வையாளர்களுக்கு ஒன்றுமே புரியவில்லை. இதை கமல்ஹாசன் இன்றைய தினம் கண்டிப்பாரா என நெட்டிசன்கள் எதிர்பார்க்கிறார்கள்.
பிக்பாஸ் நிகழ்ச்சி மொத்தம் 100 நாட்களில் 12 நாட்களை கடந்து விட்டது. இதில் நாளை எலிமினேஷன் நடைபெறும். எலிமினேஷனில் தாமரைச் செல்வியை தவிர்த்து மற்ற அனைவரும் நாமினேட் செய்யப்பட்டுள்ளார்கள்.
தாமரைச் செல்வி அந்த வீட்டின் தலைவி என்பதால் அவர் நாமினேஷனில் இருந்து தப்பினார். இன்று வார இறுதி என்பதால் கமல் நிகழ்ச்சியில் கலந்து கொள்வார்.
பிக்பாஸ் இந்த வாரம் வெளியேற போட்டிப்போடும் இருவர்...டாப் 5 இடத்தில் உள்ளவர்கள் யார் விவரம்
சுவாரஸ்யம்
கடந்த முறை சின்னப்பொண்ணுவின் கதை சுவாரஸ்யமாக இல்லை என சொன்ன ராஜுவை அட்வைஸ் என்ற பெயரில் சிரித்துக் கொண்டே கமல் ஹாசன் கடுமை காட்டினார். இதை நெட்டிசன்கள் கொண்டாடினர். இந்த நிலையில் நண்பர்களான பிரியங்காவும் நிரூப்பும் கடந்த சில தினங்களாக கண்களால் பேசிக் கொள்கிறார்கள்.
கேட்காமல் இருக்க
மேலும் நேற்றைய நிகழ்ச்சியில் அக்ஷரா ரெட்டி லவ் செய்ய தொடங்கிவிட்டார் என்பதை யாருக்கும் கேட்காமல் இருக்க நிரூப் கையில் பிரியங்கா, அக்ஷராவின் முதல் எழுத்தை எழுதி காண்பித்தார். இது போல் பல விஷயங்களை இவர்கள் இருவரும் கண்களால் பேசிக் கொள்கிறார்கள். செய்கையிலும் பேசுகிறார்கள்.
பிக்பாஸ்
இதனால் இவர்கள் என்ன பேசுகிறார்கள் என்றே வியூவர்ஸுக்கு புரியவில்லை. பிக்பாஸ் விதிகளின்படி மைக்கில்தான் பேச வேண்டும். மைக் சரியாக அணியாவிட்டாலும் கூட பிக்பாஸ் எச்சரிக்கை விடுப்பார். அது போல் கடந்த சீசன்களில் மைக்கை கழற்றிவைத்துவிட்டு பேசிய போட்டியாளர்களை கமல் கண்டித்துள்ளார்.
நிரூப் மற்றும் பிரியங்கா
இன்றைய தினம் கமல் வரும் நிகழ்ச்சியில் நிரூப் மற்றும் பிரியங்காவை கண்டிப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. சர்வைவர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் அர்ஜுன் மாதிரி வெட்டு ஒன்னு துண்டு ரெண்டு என கமல்ஹாசன் பேசினால்தான் சரி. சும்மா வழவழானு கேள்வி கேட்கக் கூடாது என நெட்டிசன்கள் கருத்து தெரிவிக்கிறார்கள்.
அர்ஜுன் போல் கமலும் அதிரடி காட்டுவாரா
ஜீ தமிழில் வெளியாகும் சர்வைவர் நிகழ்ச்சியில் எல்லாத்தையும் கேமராவில் காட்டுகிறார்கள், பிரைவசி இல்லை என போட்டியாளர் ஐஸ்வர்யா கூறிய போது நடிகர் அர்ஜுன் கடிந்து கொண்டார். பிரைவசி பாத்ரூமில் மட்டும்தான். பிரைவசி வேண்டுமென்றால் எதற்காக இந்த நிகழ்ச்சிக்கு வந்தீர்கள் என நேருக்கு நேர் கடிந்து கொண்டார் அர்ஜுன்.