ஒருபக்கம் இஸ்ரோவின் சாதனையை கொண்டாடுகிறோம்.. மறுபக்கம் குழந்தையை மீட்க போராடுகிறோம் #SaveSujith
Recommended Video
சென்னை: திருச்சி மணப்பாறை அருகே ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த குழந்தையை மீட்கக் கோரி டுவிட்டரில் #savesujith என்ற ஹேஷ்டேக் டிரென்டாகி வருகிறது.
திருச்சி மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டியில் உள்ள ஆழ்துளை கிணற்றுக்குள் 2 வயது குழந்தை சுஜித் தவறி விழுந்தான். அந்த குழந்தையை மீட்க தீயணைப்பு வீரர்கள், மாவட்ட நிர்வாகத்தினர், ஊர் மக்கள் என போராடி வருகின்றனர்.
சிறுவனின் அசைவுகள் கேமரா மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சிறுவனை காக்க வேண்டும் என பிரார்த்தனைகள் செய்யப்படுகிறது.
மீண்டு வா சுஜித்.. பலமுனை போராட்டம்.. களம் குதித்த ஸ்டண்ட் கலைஞர்கள்.. பேரிடர் படை வருவதில் தாமதம்
|
பிரார்த்தனைகள்
8 மணி நேரத்துக்கும் மேலாக போராட்டம், 2 வயது குழந்தை, 28 அடி ஆழம், 100-க்கும் மேற்பட்டோர் மீட்க போராட்டம், 130 கோடி மக்களின் பிரார்த்தனைகள், நிச்சயம் சுஜித் மீண்டு வருவான்.
|
குழந்தைகள்
ஏப்ரல் 2019- மதுரா மாவட்டத்தில் ஷேர்கா கிராமத்தில் 5 வயது குழந்தை சிக்கியது.
ஜூன் 2019- பஞ்சாப் மாநிலத்தில் ஆழ்துளை கிணற்றில் சிக்கிய 2 வயது குழந்தை
அக்டோபர் 2019- ஆழ்துளை கிணற்றில் சிக்கிய தமிழகத்தில் 2 வயது குழந்தை சுஜித்.
ஒவ்வொரு முறையும் நாம் இது போல் சிக்கும் குழந்தைகளுக்காக பிரார்த்தனை செய்து கொண்டு செல்கிறோம். ஆனால் இது போல் குழந்தைகள் சிக்கிக் கொண்டால் அவர்களை மீட்க நம்மிடம் கருவியோ தொழில்நுட்பமோ இல்லாதது வருத்தமளிக்கிறது.
|
பிரார்த்தனை செய்வோம்
பிரார்த்தனைகள் ஆச்சரியத்தை உண்டு பண்ணும்.
|
சாதனைகள்
இந்தியா மிகவும் வளர்ந்த நாடு
இஸ்ரோவின் சாதனைகளை நாம் ஒரு பக்கம் கொண்டாடி வருகிறோம்
ஆனால் போர்வெல்லில் மாட்டிக் கொண்ட குழந்தையை காக்க மறுபக்கம் போராடுகிறோம்.