வெளிநாட்டுல டப்பிங் செய்த வீடியோவுக்கு இங்க ஏன் மன்னிப்பு கேட்டீங்க ராஜா! நெட்டிசன்கள் கலகல!
Recommended Video
சென்னை: வெளிநாட்டுல டப்பிங் செய்த வீடியோவுக்கு இங்க ஏன் மன்னிப்பு கேட்கிறீங்க ராஜா என்று நெட்டிசன்கள் அவரை கலாய்த்து வருகின்றனர்.
விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தின் போது மேடை அமைக்க காவல்துறை அனுமதிக் கொடுக்காததால் திருமயம் சாலையில் வைத்து காவல்துறையையும் நீதிமன்றத்தையும் எச் ராஜா அவதூறாக பேசினார்.
இதுதொடர்பான வழக்கில் இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆஜரான எச் ராஜா நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டார். இதை நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.
|
அங்கிட்டு
நீ வீரன் கிடையாது அங்கிட்டு போ
|
வழக்கு முடித்து வைப்பு
நீதிமன்றத்தை அவதூறாகப் பேசிய விவகாரத்தில், மன்னிப்புக் கோரியதால் ஹெச்.ராஜா மீதான வழக்கு முடித்து வைக்கப்பட்டது.
|
வழக்கை சந்தியுங்கள்
நீதிமன்றத்தை அவதூறாக பேசியதாக வெளியான வீடியோவை உயர் தொழில்நுட்பம் கொண்டு யாரோ எடிட் செய்துவிட்டார்கள் என்று எச் ராஜாவும் அவரது நண்பர் எஸ்வி சேகரும் கூறினர். அப்படியிருக்கும் போது ராஜா ஏன் மன்னிப்பு கேட்டார். அது எடிட்டிங் செய்யப்பட்ட வீடியோ என்றால் தைரியமாக வழக்கை சந்தித்திருக்கலாமே.
|
டிரெண்ட் பண்றீங்க
என்னடா மன்னிப்பு கேட்டாலும் டிரெண்ட் பண்றிங்க?
|
கோர்ட்டில் மன்னிப்பு
H ராஜா நீதி மன்ற அவமதிப்பு வழக்கில் கோர்ட்டில் மன்னிப்பு கோரினார்
|
நிபந்தனையற்ற மன்னிப்பு
உணர்ச்சி வசப்பட்டு பேசிவிட்டேன்'- எச்.ராஜா: உயர் நீதிமன்றத்தில் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டார்.
ஏன் குமாரு பேசவே இல்லைனு சொன்ன.இப்போ மன்னிப்பு கேட்க்குற?
|
ஏன் மன்னிப்பு
வெளிநாட்டுல டப்பிங் பன்னதுக்கு நீங்க ஏன் மன்னிப்பு கேட்க்குறீங்க மிஸ்டர் #HRaja
அப்படிதானே #சேகர் சொன்னாரு
|
வெள்ளைக் கொடி வேந்தன்
வெள்ளைக்கொடி காட்டி ஓடி ஒளிந்ததால்., இன்று முதல் நீ "வெள்ளைக்கொடிவேந்தன்"என்று அன்போடு அழைக்கப்படுவாய்...
|
உள்ள ஒன்னுங்கிடையாதுப்பா
வெறும் பாடி லாங்குவேஜ் மட்டுந்தாம்ப்பா உள்ள ஒன்னுங்கிடையாதுப்பா 😭😭 - #Hraja
உயர்நீதிமன்றத்தில் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டார்
{document1}