மழை வருது.. மழை வருது.. குடம் கொண்டு வா.. அதகளப்படுத்தும் நெட்டிசன்ஸ்! #Chennairains
சென்னை: சென்னையில் இன்று பெய்த மழையை போதும் போதும் எனும் அளவுக்கு வரவேற்றுள்ளனர் நெட்டிசன்கள்.
சென்னையில் கடந்த சில நாட்களாக கோடை வெயிலும் கத்தரி வெயிலும் சுட்டெரித்து வந்தது. சென்னையில் வெயில் மற்றும் அனல்காற்றின் தாக்கம் சொல்ல முடியாத அளவுக்கு வாட்டியது.
கூடவே தண்ணீர் பஞ்சமும் சேர்ந்து கொண்டு மக்களை சொல்ல முடியாத துயரத்துக்கு ஆளாக்கியது. இந்நிலையில் சென்னையில் இன்று பிற்பகல் பரவலாக மழை பெய்தது.
இதனால் சென்னை மாநகர் முழுவதும் வெப்பம் தணிந்து இதமான சூழல் நிலவி வருகிறது. இந்நிலையில் சென்னையில் பெய்த மழை குறித்து நெட்டிசன்கள் தங்களின் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.
சென்னை.. எப்போல்லாம் மழை பெய்யுதோ அப்போல்லாம் நீ ரொம்ப அழகா இருக்க! உருகும் நெட்டிசன்ஸ்!
|
புவர் சென்னை பீப்புள்
பட்டிக்காட்டான் மிட்டாயை பாத்த மாதிரி-ன்னு ஒரு சொலவடை இருக்கு.தட் மொமண்ட் பை புவர் சென்னை பீப்புள்
|
சவுக்கியந்தான்!
என்னம்மா கண்ணு சௌக்கியமா?
சென்னை மழை : ஆமம்மா கண்ணு சௌக்கியந்தான்!
|
மழை நின்றுவிட்டது
மழையை பற்றி கவிதை யோசித்துக் கொண்டிருக்கும்போதே மழை நின்றுவிட்டது....
|
இந்த மழை வரம்
தண்ணீர் பற்றாக்குறையால் தவித்த சென்னை மக்களுக்கு இந்த மழை வரம்..
|
குடம் கொண்டுவா..
மழை வருது.. மழை வருது.. குடம் கொண்டு வா
|
பிள்ளையை பார்த்த மகிழ்ச்சி
நீண்ட காலமாக பிள்ளை இல்லாத பெற்றோருக்கு குழந்தை பிறந்தால் எப்படி எல்லையில்லா மகிழ்வு இருக்குமோ,அப்படி தான் இருக்கிறது இன்று சென்னை வாசிகளுக்கு அந்த "மழையை" பார்த்த பிறகு,
இனியேனும் மழை நீரை சேமிப்போம்,
அடுத்த தலைமுறையை வாழவைப்போம்