நீர் வள மேலாண்மையில் பூஜ்யம்! சாராய சாம்ராஜ்யம் மட்டுமே! கொந்தளிக்கும் மக்கள்!
Recommended Video
சென்னை: தமிழகம் முழுவதும் கடுமையான தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில் மக்கள் சமூக வலைதளங்களில் கொந்தளிக்க தொடங்கியுள்ளனர்.
தமிழகத்தில் நீலகிரி உள்ளிட்ட மிக சில மாவட்டங்களை தவிர பெரும்பாலான மாவட்டங்களில் கடுமையான தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. குடிநீர் மட்டுமின்றி குளிப்பது, துவைப்பது என அனைத்திற்கும் குடத்துடன் அலையும் நிலை ஏற்பட்டுள்ளது.
சென்னையில் தண்ணீர் பிரச்சனை உச்சத்தை எட்டியுள்ளது. இதனால் பொதுமக்கள் மட்டுமின்றி தொழில்நிறுவனங்களும் முடங்கியுள்ளன.
இந்த மாதிரி நடந்தால்... மு.க.ஸ்டாலின் முதல்வராவது உறுதி... ப.சிதம்பரம் கணக்கு
கொந்தளிக்கும் மக்கள்
மழை பெய்தால் மட்டுமே மக்களின் தேவை பூர்த்தியாகும் என்ற நிலை உருவாகியுள்ளது. இந்நிலையில் தண்ணீர் பிரச்சனை தொடர்பாக சமூக வலைதளங்களில் மக்கள் கொந்தளிக்க தொடங்கிவிட்டனர். இதனால் தவிக்கும் தமிழ்நாடு என்ற ஹேஷ்டேக் இன்றும் ட்ரென்ட்டாகியுள்ளது.
|
புலம்பி ஒன்றும் ஆகப்போவது இல்லை
காலம் காலமாக கண்டவனுக்கு ஓட்டு போட்டுட்டு தண்ணீர் இல்ல சாப்பாடு இல்லனு கத்தி புலம்பி ஒன்றும் ஆகபோவது இல்லை #தவிக்கும்தமிழ்நாடு
|
எப்படி ஆட்சி நடத்தப்போறீங்க?
சேலம் மக்களை அழிக்க 8 வழிச்சாலை
டெல்டா மக்களை அழிக்க ஹைட்ரோ கார்பன்
தேனியை அழிக்க நியூட்ரினோ
நெல்லையை அழிக்க கூடங்குளம்
கடலோர கிராமத்தை அழிக்க சாகர் மாலா
தூத்துக்குடியை அழிக்க ஸ்டெர்லைட்
எல்லாரைம் அழிச்சுட்டு எந்த மக்களை வைத்து ஆட்சி நடத்த போறீங்க எடப்பாடி?
|
இயற்கை மீது குற்றமில்லை
யார் பொறுப்பு?
நிச்சயமாக இயற்கை மீது எந்த குற்றமும் இல்லை
|
தாமதப்படுத்துவீர்களா?
இந்த நேரத்திலாவது அணைகளை, ஏரிகளை , நீர்த்தேக்கங்களை தூர்வாருவீர்களா...
இல்லை டெண்டர் விட்டு அதை செயல்படுத்துமுன் மழை வந்துவிடும் என தாமதப்படுத்துவீர்களா??
|
அதிரடி புள்ளி விவரம்
ஒரு லிட்டர் ஒயின் தயாரிக்க 960 லிட்டர் தண்ணீர் செலவு - அதிரடி புள்ளி விவரம்
|
டவுன்லோடு பண்ணமுடியாது
நீரையும், சோறையும் டவுன்லோடு பண்ண முடியாது ராஜா...
|
கண்டுகொள்ளாததே காரணம்
தட்டுப்பாடின்றி தனியார் நிறுவனங்களால் குடிநீர் வழங்க முடியும்போது, ஓட்டுப்போட்டு தேர்ந்தெடுத்த அரசாங்கத்தால் ஏன் வழங்கமுடியவில்லை???
நிலத்தடி நீரை வரையறையின்றி உறிஞ்சும் நிறுவனங்களை கண்டுகொள்ளாததின் விளைவே
|
சாராய சாம்ராஜ்யம் மட்டுமே
நீர் ஆதாரத்தில் அலட்சியம்!!! நீர் தேக்கத்தில் , நீர் சேமிப்பில் திட்டமிடுதல் கிடையாது!!!! நீர் வள மேலாண்மையில் பூஜ்யம்!!!!! சாராய சாம்ராஜ்யம் மட்டுமே!!!!!