மீண்டும் சினிமா.... அரசியலுக்கு குட்பை சொல்லும் குஷ்பு... குவியும் ஆதரவு!
சென்னை: தீவிர அரசியலில் இருந்து விலகி மீண்டும் சினிமாவுக்கு திரும்ப விரும்பவதாக நடிகை குஷ்பு பதிவிட்ட ட்வீட்டுக்கு ஆதாவு குவிந்து வருகிறது.
காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளராக இருந்து வருகிறார் குஷ்பு. லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்தது.
இதையடுத்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட பலரும் கட்சிப் பதவிகளில் இருந்து ராஜினாமா செய்துள்ளனர். ஆனால் குஷ்பு ஒட்டுமொத்தமாக அரசியலைவிட்டே விலக முடிவெடுத்துவிட்டார்.
அரசியலை விட்டு விலகப் போகிறாரா குஷ்பு?.. பரபரப்பைக் கிளப்பிய டிவீட்
அரசியலுக்கு குட்பை
இதனை தமது ட்விட்டர் பதிவு மூலமாக வெளிப்படுத்தியுள்ளார். அப்பதிவில் தாம் மீண்டும் சினிமாவுக்கு வர விரும்புவதாகவும் இது தொடர்பாக கருத்துகளை தெரிவிக்குமாறும் அவர் கேட்டிருந்தார். குஷ்புவின் இந்த பதிவுக்கு ரசிகர்கள் ஆதரவு குவிகிறது.
காங். மூழ்கும் கப்பல்
சுப்பாராவ் என்ற ரசிகர், காங்கிரஸ் மூழ்கிக் கொண்டிருக்கும் கப்பல். அதனால் நீங்கள் இப்படி சிந்திப்பது இயல்பானதுதான். அரசியலில் நடிப்பதைவிட சினிமாவில் நடிப்பதற்கு அதிக வாய்புகள் கிடைக்கும் என பதிவிட்டுள்ளார்.
கஸ்தூரி வரவேற்பு
நடிகை கஸ்தூரி, நீங்க சினிமாவுக்கு திரும்புவதை வரவேற்கிறோம் என பதிவிட்டுள்ளார். லாவன்யா பல்லால் என்பவர், வெள்ளித்திரையில் உங்களை காண ஆவலுடன் இருக்கிறோம் என பதிவிட்டுள்ளார்.
நடிகர் மனோபாலா வரவேற்பு
நடிகர் மனோபாலாவும் தயவு செய்து நடிக்க வாங்க என வரவேற்று பதிவிட்டுள்ளார். தமது பதிவுக்கு கருத்து தெரிவித்த ஒவ்வொருவருக்கும் குஷ்பு தனக்கே உரிய பாணியில் பதில் கொடுத்தும் வருகிறார்.