விவிஐபிகள் சிட்டியாக மாறும் கொடைக்கானல் வில்பட்டி வில்லேஜ்
சென்னை: கொடைக்கானலில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை குறிஞ்சி மலர்கள் அதிகமாக பூக்கும் வில்பட்டி பகுதி இப்போது விவிஐபிக்களின் தேசமாக உருவெடுத்திருக்கிறது.
கொடைக்கானல், ஊட்டி, ஏற்காடு போன்ற மலைவாசஸ்தலங்களில் அரசியல்வாதிகளும் தொழிலதிபர்களும் சொகுசு பங்களாக்கள் கட்டுவது உண்டு. இது ஒன்றும் புதிய செய்தி அல்ல.
ஆனால் ஒரு குறிப்பிட்ட கட்சியின் அதிமுக்கியப் புள்ளிகள் பலரும் வில்பட்டி அருகே நிலம் வாங்கி இருக்கின்றனர். இனி கொஞ்ச நாளில் அந்த பகுதியே ஒரு மினி கூவத்தூர் போல ஒரே கட்சியினருக்கான இடமாக உருமாறப் போகிறது.
சுபஸ்ரீ மரணம்.. பேனர் வைத்த அதிமுக ஜெயகோபாலுக்கு திடீர் நெஞ்சு வலி.. மருத்துவமனையில் அனுமதி
இந்த நிலவிவரங்கள் அனைத்தும் சட்டப்படியே மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. சிலர் தங்களது மனைவி, உறவினர்கள் பெயர்களில் பட்டாவும் பெற்றிருக்கின்றனர்.
சொகுசு பங்களாக்கள் கட்டுமளவுக்கு இடங்கள் வாங்கி போடப்பட்டுள்ளன. ஒரே கட்சியின் அத்தனை அதிமுக்கிய புள்ளிகளும் ஒரே இடத்தில் நிலம் வாங்கி இருப்பதுதான் அப்பகுதி மக்களின் ஹாட் டாபிக்காக இருக்கிறது.
வில்பட்டி வில்லேஜ் இனி விவிஐபி சிட்டி!