"மாண்புமிகு பாரத பிரதமர் நரேந்திர மோடிஜி".. அதிமுக உருவாக்கிய புதிய ஸ்லோகம்..!
அதிமுக தரப்பினர் இன்று பிரதமரை வாயார புகழ்ந்து தள்ளிவிட்டனர்.
சென்னை: இன்று மோடி பங்கேற்ற விழாவில் அதிமுக தலைவர்கள் புது ஸ்லோகம் ஒன்றினையே உருவாக்கி விட்டார்கள். அதுதான் இன்றைய ஸ்பெஷல்!
ஜெயலலிதா இருந்தபோதும் சரி, மறைந்தபோதும் சரி, வழக்கமாக தமிழக அமைச்சர்கள் சொல்லும் ஸ்லோகம் "மாண்புமிகு இதய தெய்வம் டாக்டர் புரட்சி தலைமை அம்மா அவர்கள்" என்பதுதான்.
இதை கிட்டத்தட்ட எல்லா அமைச்சர்களுமே இதை உச்சரித்தாலும், முதல்வரும், எடப்பாடியும் இதை சொல்வதே தனி அழகுதான். இருவருமே வேகவேமாக இதனை உச்சரிப்பார்கள். அது காரசார விவாதமாக இருந்தாலும் சரி, பேட்டிகள் தரும்போதும் சரி, சரளமாகவும், அதே நேரத்தில் ஸ்பீடாகவும் மறக்காமலும் வந்து இந்த வார்த்தைகள்தான் விழும்.
ஜாதியை வைத்து திட்டுகிறார்கள்.. சிலர் என்னை கொல்ல கூட நினைக்கிறார்கள்.. மோடி பரபர பேச்சு
ஆனால் இந்த பழக்கதோஷமா என்னவென்று தெரியவில்லை, இன்று மோடி பங்கேற்ற நிகழ்ச்சியில் முதல்வர், துணை முதல்வர் உட்பட எல்லோருமே புது ஸ்லோகம் ஒன்றினை சொன்னார்கள். அது "மாண்புமிகு பாரத பிரதமர் நரேந்திர மோடி ஜி" என்பதுதான். இந்த முழக்கம் விழா தொடங்கி முடியும் வரை கேட்டது.
அதேபோல விழா மேடை மற்றும் சுற்றியுள்ள இடங்கள், அலங்காரங்கள் என எல்லாமே பச்சை கலரில் மின்னியது. வழக்கமாக பாஜக தலைவர்கள் பங்கேற்ற மேடை காவி நிறத்தில் இல்லாமல், பச்சை பசேல் என இருந்தது அதிமுக விழா போலவே இருந்தது.
விழாவின் இன்னொரு சிறப்பம்சம், மோடி பேச்சை மொழிபெயர்த்து கொண்டிருந்த எச்.ராஜா, சம்பந்தமே இல்லாமல் "ரயில்கள் திறமையாக ஓடும்" என்றார். ரயில்கள் ஓடும் சரி... திறமையாக எப்படி தானாகவே ஓடும் என்றுதான் புரியவில்லை. மற்றபடி விழா நன்றாகவே நடந்து இனிதே முடிந்தது!