தமிழ் உச்சரிப்பில் புதிய ஆங்கில பெயர்களுடன் கூடிய தமிழக வரைபடம் வெளியீடு
சென்னை: தமிழ் உச்சரிப்புடன் கூடிய புதிய ஆங்கில பெயர்களில் மாவட்டங்களை எழுதி தமிழக அரசு மாவட்ட வாரியான வரைபடத்தை வெளியிட்டுள்ளது.
தமிழக அரசு அண்மையில் ஆயிரத்திற்கும் அதிகமான ஊர்களின் பெயர்களை தமிழ் உச்சரிப்புடன் கூடிய ஆங்கில வார்த்தையாக மாற்றியது.
வெள்ளைக்காரர்களின் வாயில் உச்சரிக்க முடியாததால் மாறிப்போன பெயர்களை தமிழ் உச்சரிப்பிலேயே இனி எழுத வேண்டும் என்றும் தமிழ் உச்சரிப்பில் தான் பேச வேண்டும் என்று அரசு அறிவித்துள்ளது.
பலத்த காற்று வீசும்.. தமிழகத்தில் இந்த 8 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் செம நியூஸ்!
வேலூர்
உதாரணமாக coimbatore என்று அழைக்கப்பட்ட கோயம்புத்தூர், தமிழில் உள்ளது போலவே koyampuththoor என மாற்றப்பட்டுள்ளது. இதேபோல் vellore என அழைக்கப்பட்டு வந்த வேலூர், உச்சரிப்பில் உள்ளது போலவே veloor என மாற்றப்பட்டுள்ளது, tanjoavore என அழைக்கப்பட்ட தஞ்சாவூர் தற்போது thanjavoor v என அறிவிக்கப்பட்டுள்ளது.
விழுப்புரம்
madurai என அழைக்கப்பட்ட மதுரை இப்போது உச்சரிப்பில் உள்ளவாறு mathurai என்று மாற்றி அறிவிக்கப்பட்டுள்ளது. dindigul என அழைக்கப்பட்ட திண்டுக்கல் இப்போது thindukkal என மாற்றப்பட்டுள்ளது. விழுப்புரம் இதுவரை villupuram என்று அழைக்கப்பட்ட நிலையில் இனி vizhupuram என மாற்றப்பட்டுள்ளது.
தூத்துக்குடி
erode என அழைக்கப்பட்ட ஈரோடு, உச்சரிப்பில் உள்ளவாறு erodu என்று மாற்றப்பட்டுள்ளது. tirupur என அழைக்கப்பட்ட திருப்பூர், இப்போது உச்சரிப்பதை போலவே tiruppoor என மாற்றப்பட்டுள்ளது. இதேபோல் கரூர் தற்போது karur என்பதில் இருந்து karoor என மாற்றி அறிவிக்கப்பட்டுள்ளது. தர்மபுரி இதுவரை dharmapuri என அழைக்கப்பட்ட நிலையில் இப்போது tharmapuri என்று மாற்றப்பட்டுள்ளது. tutucorin என அழைக்கப்பட்ட தூத்துக்குடி இப்போது உச்சரிப்பில் உள்ளது போ thooththukkudi என மாற்றப்பட்டுளளது.
பெயர் மாறாத மாவட்டங்கள்
இப்படியாக பல்வேறு மாவட்டங்களின் பெயர்கள் மாற்றி புதிய தமிழ்நாடு வரைபடத்தை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இதில் தேனி, சென்னை, சேலம், தென்காசி, ராமநாதபுரம், திருநெல்வேலி, கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி, கடலூர், திருச்சிராப்பள்ளி, நாமக்கல், உள்ளிட்ட சில மாவட்டடங்களின் பெயர்கள் எந்த மாறுதலும் செய்யப்படவில்லை.