எஸ்.ஐ. வில்சன் கொலையாளிகளுக்கு சிம்கார்டு வழங்கிய வழக்கு- என்.ஐ.ஏ.வுக்கு மாற்றம்
Recommended Video
சென்னை: கன்னியாகுமரி எஸ்.ஐ. வில்சன் கொலையாளிகளுக்கு சிம்கார்டு வழங்கிய வழக்கு என்.ஐ.ஏ.வுக்கு மாற்றப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி களியக்காளை சோதனைச் சாவடியில் பணியில் இருந்த எஸ்.ஐ. விசல்னை கடந்த 8-ந் தேதி அப்துல் சமீம், தவ்ஃபிக் ஆகிய 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொன்றனர்.
இந்த 2 தீவிரவாதிகளும் கர்நாடகா மாநிலம் உடுப்பியில் பதுங்கியிருந்த போது கைது செய்யப்பட்டனர். இவர்களுக்கு உதவியதாக பெங்களூரு, காஞ்சிபுரம் உள்ளிட்ட இடங்களில் இருந்து கூட்டாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
காஞ்சிபுரத்தில் தீவிரவாதிகளுக்கு சிம்கார்டுகளை வாங்கி கொடுத்த 6 பேரும் சிக்கினர். இந்நிலையில் தீவிரவாதிகளுக்கு சிம்கார்டு வாங்கி கொடுத்த வழக்கு தற்போது தேசிய புலனாய்வு ஏஜென்சியாக என்.ஐ.ஏ.வுக்கு மாற்றப்பட்டுள்ளது.
மணிப்பூர் வழக்கு: சபாநாயகருக்கான அதிகாரங்கள்... நாடாளுமன்றம் பரிசீலனை செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவு
தீவிரவாதிகளுக்கு வெளிநாட்டு தொடர்புகள் இருக்கலாம் என்பதால் வில்சன் கொலை தொடர்பான அனைத்து வழக்குகளுமே விரைவில் என்.ஐ.ஏ.வுக்கு மாற்றப்படலாம் என்கின்றன போலீஸ் வட்டாரங்கள்.