மனசு சரியில்லை.. ஒரே விரக்தி.. டாக்டரிடம் போன நிர்மலா தேவி.. சிகிச்சை தொடங்கியிருக்காம்!
நிர்மலாதேவி உளவியல் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது
Recommended Video
சென்னை: உளவியல் சிகிச்சை எடுத்து கொள்ள.. தனியாகவே மனநல ஆஸ்பத்திரிக்கு சென்றுள்ளார் நிர்மலாதேவி. அதனால்தான் இன்றைக்கு கோர்ட்டுக்குகூட வரவில்லையாம்!
கடந்த 8-ம் தேதி ஸ்ரீவில்லிப்புத்தூர் கோர்ட்டில் விசாரணை.. ஆனால் வந்ததே லேட்டு.. கோர்ட்டுக்கு வரும்போது டிப்-டாப்பாக டிரஸ் செய்தார். கழுத்து நிறைய நகைகள், தலை நிறைய பூ என இயல்பாகவே இருந்தார்.
வீட்டிலிருந்து பொறுமையாக டிரஸ் செய்து கொண்டு கோர்ட்டுக்கு வந்தவர், அங்குதான் வினோதமாக நடக்க தொடங்கினார். அதுவரை நன்றாக இருந்த முடியை வெட்டி காதில் தொங்க விட்டு கொண்டார், பிறகு அவிழ்த்து கொண்டார், காமாட்சி அம்மன் முதல் தர்கா வரை ஒரே நாளில் அருப்புக்கோட்டையை தலைவிரி கோலத்துடன், அலற வைத்தார்.
நிர்மலாதேவி தெளிவாதான் இருக்காங்க.. நாமதான் குழம்பிட்டோம் போல.. புது ஆடியோவால் மேலும் குழப்பம்!
அழுத்தம்
இதனால் மனநலம் பாதிக்கப்பட்டுள்ளாரோ, மன அழுத்தத்தினால் இப்படி நடந்து கொண்டுள்ளரோ என்ற சந்தேகமும், குழப்பமும் நமக்கு ஏற்பட்டது. ஆனால் மறுநாளே நார்மல் மோடுக்கு வந்தவர், "மனநலம் பாதிக்கப்பட்டுள்ளது, டாக்டரிடம் கூட்டிச் செல்லுங்கள் என்று அவரே வக்கீலுக்கு போன் செய்து கேட்டுக் கொண்டார். அந்த ஆடியோ ரெக்கார்ட் செய்யப்பட்டு மீடியாவிலும் வெளியானது.
ஆஜராகவில்லை
இந்நிலையில், அன்றைய வழக்கினை இன்றையை தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டிருந்தது. இதில், சம்பந்தப்பட்ட உதவிப் பேராசிரியர் முருகன், கருப்பசாமி ஆஜரான நிலையில், நிர்மலாதேவி ஆஜராகவில்லை. தன் வக்கீல் மூலம் விடுப்பு மனு தாக்கல் செய்தார். அதனால் வழக்கு வரும் ஆகஸ்ட் 5-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
சிகிச்சை
நிர்மலாதேவி ஏன் கோர்ட்டுக்கு இன்று வரவில்லை என்று பிறகுதான் காரணம் தெரிந்துள்ளது. மன அழுத்தத்தில் உள்ளாராம்.. விரக்தியின் பிடியில் சிக்கி உள்ளாராம். அதனால் உளவியல் சிகிச்சை பெற்று வருகிறாராம். இன்றுகூட பெறுவதற்காகத் ஒரு மனநல ஆஸ்பத்திரிக்குதான் சென்றுள்ளாராம். அதுவும் தானாகவே யார் துணையும் இன்றி சென்றிருக்கிறார்.
நார்மல்
ஒரு உறவினரும் ஆஸ்பத்திரிக்குகூட வர காணோம். நிர்மலாதேவியை பரிசோதித்த டாக்டர்கள், சிறிய அளவிலான மனநல பிரச்சனைதான், 4 முறை இதற்கு உளவியல் ட்ரீட்மெண்ட் தந்தால், எல்லாம் சரியாகிவிடும். நிர்மலாவும் நார்மலுக்கு வந்துவிடுவார் என்று டாக்டர்கள் சொன்னார்களாம்!