"நாம் இருவரும் பிரிந்தால் இந்து மதத்தின் மூலலிங்கம் அழியும்".. ஒருவர் நித்தி.. மற்றொருவர் யார்?
Recommended Video
சென்னை: நாம் இருவரும் பிரிந்தால் இந்து மதத்தின் மூலலிங்கம் அழியும். இந்து மதத்தை அழிக்க நினைப்பவர்கள் தான் நம் இருவரையும் பிரிக்க நினைக்கிறார்கள் என இன்டர்போல் போலீஸாரால் தேடப்படும் நித்யானந்தா தெரிவித்துள்ளார்.
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நித்யானந்தா ஆசிரமத்தில் சிறுமிகள் கடத்தப்பட்டு துன்புறுத்தப்பட்டதாக எழுந்த புகாரில் நித்யானந்தா மீது வழக்கு பதிவு செய்து அவரை தேடி வருகிறது அந்த மாநில போலீஸ்.
இந்த நிலையில் போலீஸாருக்கு டிமிக்கி கொடுத்துவிட்டு நித்யானந்தா எங்கோ வெளிநாட்டுக்கு தப்பி சென்றுவிட்டார். எனினும் தனது சிஷ்யகோடிகளுடன் தினமும் சத்சங்கம் நடத்துவதை தவறுவதில்லை. அதே வேளையில் போலீஸாருக்கு பதிலடி கொடுப்பதையும் விடவில்லை.
நாஞ்சில் சம்பத் இப்படியா பேசுவது.. பட்டுன்னு இப்படி சொல்லிட்டாரே... ரஜினி ரசிகர்கள் கொந்தளிப்பு
வாழ முடியாது
அந்த வகையில் பகவான் நித்யானந்தா பரமசிவம் என்ற பெயரில் அவரது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில் நம் வாழ்க்கையில் நாம் எல்லோரும் நமக்கென ஒரு என்ர்ஜியை ப்ளூ பிரிண்ட்டாக வைத்துள்ளோம். அது இல்லாமல் வாழ முடியாது.
இருவரும்
விழிப்புணர்வோடு வாழ்ந்தால் சிவபெருமானே பூசலாருக்கு சிவகதி கொடுத்தது போல நமக்கும் கொடுப்பார். நாம் இருவரும் இணைந்தால் இந்து மதத்தின் மூலலிங்கம் அழிந்துவிடும். இந்து மதத்தை யார் அழிக்க நினைக்கிறார்களோ அவர்கள்தான் நம் இருவரையும் பிரிக்க நினைக்கிறார்கள்.
அரைமணி நேரம்
உங்கள் வாழ்க்கைக்கான உயிர் மூல லிங்கத்தை உருவாக்க வேண்டுமென்றால் அதற்கு தேவையான முதல் விஷயம் முதிர்ந்த உரையாடல்தான். காலை எழுந்தவுடன் அரை மணி நேரமாவது பகவானை நினைத்து ஜபியுங்கள்.
சிஷ்யைகள்
வாழ்க்கையின் மூல லிங்கத்தை உருவாக்குவதற்கு வெளியிலிருந்து சமூகம் நம் மீது நடத்தி வரும் தாக்குதல்களிலிருந்து விடுவித்துக் கொள்வதே ஆகும் என தெரிவித்துள்ளார். நாம் இருவரும் பிரிந்தால் இந்து மதத்தின் மூலலிங்கம் அழியும் என நித்யானந்தா கூறியிருப்பது யாரை என்ற கேள்வி பலர் மத்தியில் எழுந்துள்ளது. அதை விட சிஷ்யைகள் மத்தியில் போட்டி பொறாமையுடன் பலத்த எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.