சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

புயல் கடந்து கொஞ்ச நேரம்தான் ஆகிறது.. அதற்குள் மாற்றத்தை பாருங்க.. ப்பா சென்னையில் இவ்வளவு ஸ்பீடா!

Google Oneindia Tamil News

சென்னை: சென்னைக்கு அருகே நிவர் புயல் கரையை கடந்து கொஞ்ச நேரம்தான் ஆகிறது. ஆனால் அதற்குள் சென்னையில் இயல்பு வாழ்க்கை கொஞ்சம் கொஞ்சமாக திரும்ப தொடங்கிவிட்டது.

இன்று அதிகாலை 2.30 மணிக்கு நிவர் புயல் மரக்காணம் அருகே கரையை கடந்தது. புதுச்சேரி - மரக்காணம் பகுதிக்கு இடையில் நிவர் புயல் கரையை கடந்தது.

இந்த புயல் கரையை கடக்கும் போது 143 கிமீ வேகத்தில் காற்று வீசியது. அதி தீவிர புயலாக நிவர் கடந்த நிலையில் வடமாவட்டங்களில் பலத்த சேதம் ஏற்பட்டது.

 அந்த 6 மணி நேரம்.. லேசாக மாறிய நிவர்.. கடைசி நேர டிவிஸ்ட்.. புயல் கரையை கடக்கும் போது நடந்தது என்ன? அந்த 6 மணி நேரம்.. லேசாக மாறிய நிவர்.. கடைசி நேர டிவிஸ்ட்.. புயல் கரையை கடக்கும் போது நடந்தது என்ன?

சென்னை

சென்னை

சென்னையில் இந்த புயல் காரணமாக கடந்த இரண்டு நாட்களாக கனமழை பெய்தது. இதனால் சென்னையில் இருக்கும் ஏரிகள் எல்லாம் மொத்தமாக நிரம்பியது. அதேபோல் சென்னையில் இருக்கும் பல்வேறு சாலைகளில் தண்ணீர் நிரம்பி வெள்ளம் போல காட்சி அளிக்கிறது.

எப்படி

எப்படி

இந்த நிலையில் சென்னையில் வெள்ளம் ஏற்படாத பிற பகுதிகளில் இயல்பு வாழ்க்கை கொஞ்சம் கொஞ்சமாக திரும்ப தொடங்கிவிட்டது. ஆம் சென்னையில் தற்போது விமான போக்குவரத்து தொடங்கிவிட்டது. காலை 7 மணியில் இருந்தே விமானம் இயங்க தொடங்கிவிட்டது. இன்னொரு பக்கம் சாலைகளில் வாகனங்கள் செல்ல தொடங்கிவிட்டது.

புயல்

புயல்

புயல் மொத்தமாக கரையை கடந்துவிட்டதால் சாலையில் வாகனங்கள் தென்பட தொடங்கி உள்ளது. சென்னையில் தற்போது அரசு பேருந்துகளும் இயங்க தொடங்கி உள்ளது. சென்னையில் குறைந்த அளவில் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. மாநகர போக்குவரத்து கழகத்தின் சார்பில் குறைந்த அளவில் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

கூடுதல்

கூடுதல்

சென்னையில் சாலைகளின் நிலையை பொறுத்து கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் என்று தமிழக அரசு கூறியுள்ளது. மக்களும் வெளியே வர தொடங்கி உள்ளனர். பெரிய அளவில் வெள்ளம் இல்லை என்ற நிம்மதியில் மக்கள் உள்ளனர்.

மரங்கள்

மரங்கள்

அதேபோல் சென்னையில் கீழே மரங்களை அப்புறப்படுத்தும் பணிகளும் துரிதமாக நடந்து வருகிறது. இதற்காக நவீன எந்திரங்கள் களமிறக்கப்பட்டள்ளது. புயல் கரையை கடந்து 4 மணி நேரம் மட்டுமே ஆகியுள்ள நிலையில் சென்னை இயல்பு வாழ்க்கைக்காக வேகமாக தயாராகி வருகிறது.

English summary
Nivar Storm: Chennai is getting back to its life slowly after heavy rain for two days.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X