சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

நகர மறுக்கிறது.. எங்க போய் நிக்குது பாருங்க நிவர்.. திருவண்ணாமலையில் விடாமல் சுழன்று அடிக்கும் புயல்

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் நிவர் புயல் கரையை கடந்து விட்டாலும் இன்னும் முழுமையாக புயல் தமிழகத்தை விட்டு செல்லவில்லை.

Recommended Video

    நிவர் கரையை கடந்து விட்டாலும் திருவண்ணாமலையில் விடாமல் சுழன்று அடிக்கும் புயல் காற்று - வீடியோ

    தமிழகத்தில் கடந்த இரண்டு நாட்களாக பரபரப்பை ஏற்படுத்திய நிவர் புயல்.. ஒருவழியாக கரையை கடந்துள்ளது. நேற்று இரவு 11.30 மணிக்கு கரையை கடக்க தொடங்கிய நிவர் புயல் இன்று அதிகாலை 2.30 மணிக்கு முழுமையாக கரையை கடந்தது.

    இந்த புயல் அதிதீவிர புயலாக நேற்று மதியம் உருவெடுத்தது. நேற்று புயல் கரையை கடக்கும் போது 143 கிமீ வேகத்தில் சூறாவளி காற்று வீசியது.

    புயல் கிராஸ் ஆன புதுவையை விட.. 24 மணி நேரத்தில் மழை எங்கு அதிகம் தெரியுமா?.. வெதர்மேனின் டேட்டா இதோ!புயல் கிராஸ் ஆன புதுவையை விட.. 24 மணி நேரத்தில் மழை எங்கு அதிகம் தெரியுமா?.. வெதர்மேனின் டேட்டா இதோ!

    எங்கு

    எங்கு

    இன்று அதிகாலை 2.30 மணிக்கு நிவர் புயல் மரக்காணம் அருகே கரையை கடந்தது. புதுச்சேரி - மரக்காணம் பகுதிக்கு இடையில் நிவர் புயல் கரையை கடந்தது. இந்த புயல் கரையை கடந்து விட்டாலும் இன்னும் தமிழகத்தை விட்டு முழுமையாக செல்லவில்லை.

    நகரவில்லை

    நகரவில்லை

    இந்த புயல் தொடக்கத்தில் இருந்தே பல இடங்களில் நின்று நின்றுதான் பயணம் செய்தது. வங்கக்கடலில் நேற்று முதல் நாள் 4 மணி நேரம் ஒரே இடத்தில் இந்த புயல் நிலை கொண்டது. அதேபோல் தற்போது தமிழகத்தில் இருந்தும் புயல் வெளியேற மறுக்கிறது.

    மறுக்கிறது

    மறுக்கிறது

    தமிழகத்தில் நிவர் புயல் கரையை கடந்து விட்டாலும் இன்னும் முழுமையாக புயல் தமிழகத்தை விட்டு செல்லவில்லை. தற்போது திருவண்ணாமலையில் புயல் மையம் கொண்டு உள்ளது. திருவண்ணாமலையில் இருந்து புயல் நகர மறுக்கிறது.

    ஆனால் என்ன

    ஆனால் என்ன

    இந்த புயல் காரணமாக திருவண்ணாமலையில் தற்போது தீவிர மழை மற்றும் காற்று அடித்து வருகிறது. இந்த புயல் காரணமாக அங்கு சேதம் அதிகம் ஆக வாய்ப்பு உள்ளது. ஆனால் நிவர் புயல் வலிமை இழந்துவிட்டது. இந்த புயல் கடந்த பின்பும் 6 மணி நேரம் தாக்கம் இருக்கும் என்று வானிலை மையம் கூறியது.

    வலிமையே இல்லை

    வலிமையே இல்லை

    தற்போது அதேபோல் புயலின் தாக்கம் நீடிக்கிறது. நிவர் புயல் அதி தீவிர புயலில் இருந்து தீவிர புயலாக மாறி, தற்போது சாதாரண புயலாக மாறி உள்ளது. இந்த புயல் ஆந்திரா நோக்கி செல்ல வேண்டும். ஆனால் இன்னும் சில மணி நேரம் திருவண்ணாமலையில் இப்படியே நிற்க வாய்ப்புள்ளது.

    English summary
    Nivar Storm gets halted in Thiruvannamalai after loosing its strength during landfall.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X