என்னாது கருப்பு டிரஸ்ஸா.. கூடவே கூடாது.. தடை விதித்த துக்ளக்.. அதிரடி கட்டுப்பாடு!
சென்னை: துக்ளக் வார இதழின் பொன்விழா நிகழ்ச்சியில் கறுப்புடையுடன் வர தடை விதிக்கப்பட்டுள்ளது.
துக்ளக் வார இதழின் 50-ஆம் ஆண்டு நிறைவு விழா சென்னையில் இன்று மாலை நடைபெறுகிறது. இதில் பொன்விழா மலரை வெளியிட்டு சிறப்புரை நிகழ்த்துகிறார் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு.
பொன்விழா மலரின் முதல் பிரதியை பெற்று நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்துரை வழங்குகிறார். இதில் துக்ளக் ஆசிரியர் எஸ். குருமூர்த்தி உரையாற்றுகிறார்.
No entry for those wearing black clothes at Thuglak function today. Isn't black the preferred colour of Sabarimala devotees? Also Rajinikanth, who is an invitee, has often been spotted dressed in black. pic.twitter.com/q39trE8OZp
— D Suresh Kumar (@dsureshkumar) January 14, 2020
சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெறும் இந்த விழாவுக்கு கறுப்பு உடியுடன் வரக் கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. அத்துடன் அடையாள அட்டையுடன் வரவேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.