ஒரே நாளில் 1 கோடிக்கு மேல் பறிமுதல்… தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி
சென்னை: தமிழகத்தில் இன்று ஒரே நாளில் உரிய ஆவணங்களின்றி எடுத்து வரப்பட்ட ஒரு கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நாடாளுமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை அடுத்து நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளது. தமிழகத்தில் அடுத்த மாதம் 18 ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து செல்லப்படும் பணம் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது.
அந்த வகையில், உதகையில் ஏ.டி.எம். இயந்திரத்துக்கு பணம் நிரப்ப சென்ற வாகனத்தில் ரூ.76 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. முறையாக ஆவணங்கள் இல்லாததால் தேர்தல் பறக்கும் படை பறிமுதல் செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
யாரை காப்பாற்றுவதற்காக வழக்குப்பதிவு இழுத்தடிக்கப்பட்டது?... கனிமொழி எம்.பி கேள்வி
இதேபோல், நெல்லை மாவட்டம் ஆலங்குளத்தில் தேர்தல் பறக்கும்படையினரால் ரூ.60 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. தனியார் பள்ளி மேலாளர் எடுத்துச் சென்ற பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். பள்ளி கட்டணமாக வசூலான பணத்தை வங்கியில் செலுத்த சென்றபோது பறிமுதல் செய்யப்பட்டது.
மேலும், ஜெயங்கொண்டம் பகுதியில் ரூபாய் 12 லட்சம், உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து வரப்பட்டது. அதனையும் தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர்.