குழாய் வச்சீங்க சரி.. அதை எப்படி திருகுவது.. எப்படி கொரோனாவை "கை" கழுவுவது?
கொரேனாவிற்கு கை கழுவ ஏற்பாடு செய்தவர்கள் குழாய் வைக்காமல் விட்டு விட்டார்கள். அடைக்கப்பட்டிருக்கும் குழாயில் இருந்து எப்படி தண்ணீர் பிடித்து கை கழுவுவது என்று கேட்கின்றனர் மக்கள்.
சென்னை: கொரோனா வைரஸ் பரவி வருவதால் எங்கும் எப்போதும் கை கழுவி சுத்தமாக இருக்க வேண்டும் என்று அரசு அறிவுறுத்தி வருகிறது. மாஸ்க் அணிந்து கொண்டுதான் வெளியில் செல்ல வேண்டும் என்று வலியுறுத்துவதோடு பொது இடங்களில் கை கழுவுவதற்கு சானிடைசர்களை வைத்துள்ளனர். இங்கே குழாயே இல்லாமல் வெறும் சிங்க் மட்டுமே வைத்திருப்பதால் என்ன செய்வது எப்படி கை கழுவுவது என்று கேட்டிருக்கின்றனர்.
கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் 2 கோடி பேரை எட்டிப்பிடித்துள்ளது. 1 கோடி பேர் வரை குணமடைந்திருந்தாலும் இன்னமும் பல ஆயிரம் பேரை பற்றி பரவி வருகிறது. 150 நாட்களுக்கும் மேலாக மக்களிடையே பதற்றமும் அச்சமும் ஏற்பட்டு வருகிறது. ஏழு கட்டமாக லாக்டவுன் அமல்படுத்தப்பட்டு வருகிறது.
இதனிடையே கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக அரசு அலுவலகங்களில் தனியாக சிங்க் மற்றும் சானிடைசர்களும் வைத்து அனைவரையும் கை கழுவச்சொல்கின்றனர். அரசு கேபிள் டிவி நிறுவனம், இ சேவை மையம் ஒன்றில் பொறுப்பாக சிங்க் வைத்தவர்கள் குழாயை அடைத்து விட்டார்கள். இதனை போட்டோ எடுத்து ட்விட்டரில் ஒருவர் போட அந்த போட்டோ தற்போது வைரலாகி வருகிறது.
மெகா ஆஃபர்.. ஒரு பக்கம் திமுக.. மற்றொரு பக்கம் அதிமுக.. கொரோனாவால் கதவை மூடிய நயினார் நாகேந்திரன்
இப்படி சிங்க் மட்டுமே வைத்தால் எப்படி குழாயை பிடித்து திருகி தண்ணீர் எடுத்து கொரோனாவை கை கழுவுவது என்று கேட்டு வருகின்றனர்.