36 வயசுதான்.. ஒத்த கொலுசுக்கு ஆசைப்பட்டு.. லாட்ஜில் ரூம் போட்டு.. அடுத்து நடந்த டிவிஸ்ட்!
வடமாநில பெண்ணிடம் கொள்ளை அடித்த நபரை தேடி வருகின்றனர்
சென்னை: பார்த்த கொஞ்ச நேரத்திலேயே நபரின் பேச்சில் மயங்கிவிட்டார் ஒரு பெண்.. கடைசியில் லாட்ஜில் ரூம் போட்டு, அதன்பிறகு நடந்த சம்பவம் இருக்கே...??
அசாம் மாநிலத்தை சேர்ந்தவர் அந்த பெண்.. பெயர் நிமிக்.. 36 வயசாகிறது.. நேற்று முன்தினம் அசாமில் இருந்து பிளைட்டில் சென்னைக்கு வந்திருக்கிறார்..
பிளைட்டில் பக்கத்து வீட்டில் உட்கார்ந்திருந்தவர் சலீம்.. ஒரே பிளைட் என்பதால் ஒருவருக்கொருவர் அறிமுகமாகி பேச ஆரம்பித்துள்ளனர்.
"சூப்பர்.. ஒருநாள் வீட்டுக்கு வாங்க நடராஜன்".. சரத்குமார் பேச பேச.. மகிழ்ச்சி பொங்க பார்த்த ராதிகா!
பேச்சு
பார்ப்பதற்கு சலீம் செம லுக்காக இருந்திருக்கிறார்.. டிப்டாப் உடை, நுனிநாக்கு இங்கிலீஷ், அன்பான பேச்சு போன்றவைகள் நிமிக்கை ஈர்த்துவிட்டது.. பிளைட்டில் சென்னை வந்து இறங்குவதற்குள் ரெண்டு பேரும் க்ளோஸ் ஆகிவிட்டார்கள். ஆசை வார்த்தைகள் என்னென்னமோ பேச, சலீமுடனேயே நிமிக்கும் பின்னாடியே சென்றார்.
லாட்ஜ்
பூங்கா நகரில் உள்ள ஒரு லாட்ஜில் ரூம் போட்டுள்ளார்.. அங்கேயே தங்கியும் உள்ளனர்.. பிறகு, "நான் உனக்கு ஒரு கொலுசு வாங்கி தரேன் வா" என்று நிமிக்கை அழைத்து கொண்டு என்எஸ்சி போஸ் ரோட்டில் உள்ள அந்த ஃபேமஸான நகைக்கடைக்கு சென்றிருக்கிறார் சலீம்.. கடைக்காரர்கள் விதவிதமான கொலுசை எடுத்து காண்பிக்க, அதை ஒவ்வொன்றாக தன்னுடைய காலில் போட்டு அழகு பார்த்துக் கொண்டிருந்தார் நிமிக்.
மிஸ்ஸிங்
அப்போது, திடீரென பாத்ரூம் போகிறேன் என்று சொல்லிவிட்டு அங்கிருந்து நகர்ந்துள்ளார் சலீம்.. அதோடு சரி.. ஆளை காணோம்.. போகும்போது நிமிக்கின் பர்ஸையும் லவட்டி கொண்டு போய்விட்டார். எவ்வளவோ நேரம் தேடி தேடியும் சலீமை காணவில்லை.. அந்த பர்ஸில் 15 ஆயிரம் ரூபாய் இருந்ததாம்.. இதுபோக, ஏடிஎம் கார்டு, செல்போன், பாஸ்போர்ட், போன்றவை இருந்திருக்கின்றன.
தலைமறைவு
வந்த இடத்தில், கையில் காசு இல்லாமல், எங்கு போவது என்று தெரியாமல் நிமிக் நடுரோட்டில் நின்று தவித்தபோதுதான், வந்த ரோந்து போலீசார் அந்த பக்கமாக வந்து விசாரித்திருக்கிறார்கள். நடந்ததை சொல்லி நிமிக் அழவும், இது சம்பந்தமாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.. சலீமையும் தேடி வருகிறார்கள். ஒத்த கொலுசுக்கு ஆசைப்பட்டு, நிமிக் என்னென்னவோ இழந்துவிட்டாரே?!