சென்னையில் வெயில் எட்டி பாக்குதேனு நினைக்காதீங்க.. இன்றும் மழை இருக்கு.. 28 வரை இப்படிதான்.. நார்வே
Recommended Video
சென்னை: சென்னையில் இன்று பிற்பகல் மழை பெய்யும் என நார்வே வானிலை மையம் அறிவித்துள்ளது.
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கடந்த 4 நாட்களாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், திருவண்ணாமலை உள்ளிட்ட பகுதிகளில் கனமழை கொட்டியது. இந்த மழை வேலூரையே புரட்டிபோட்டுவிட்டது.
எங்கு பார்த்தாலும் தண்ணீர் நிறைந்து காணப்படுகிறது. வேலூரை சுற்றியுள்ள நீர் நிலைகள் நிரம்பியுள்ளன. இந்த நிலையில் சென்னையில் இத்தனை நாட்கள் வறட்சி நிலவி வந்த நிலையில் அவ்வப்போது லேசான மழை பெய்து வந்தது.
சிறு குறு தொழில்கள் அழியும் அபாயம்.. லட்சக்கணக்கானோர் வேலை இழந்து வருதற்கு இதுவே முக்கிய காரணம்
மேகமூட்டம்
இந்த நிலையில் வெப்பச்சலனம் மற்றும் வளி மண்டல மேலடுக்கு காரணமாக கடந்த 3 தினங்களாக மழை பெய்து வந்தது. இந்த நிலையில் நேற்று காலை முதல் லேசாக தூறல் இருந்து வந்தது .பின்னர் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.
பிற்பகல் மழை பெய்யும்
இதையடுத்து நேற்று இரவு மழை பெய்யும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பெய்யவில்லை. இன்று காலை முதல் வெயில் தலைகாட்டி வருகிறது. இந்த நிலையில் இன்று பிற்பகல் மழை பெய்யும் என நார்வே வானிலை மையம் தெரிவித்துள்ளது.
கனமழைக்கு வாய்ப்பு
இதுகுறித்து அந்த மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: இன்று பிற்பகல் மழை பெய்யும். அதுபோல் இன்று நள்ளிரவு முதல் நாளை வரை ஒரு சில இடங்களில் கனமழையும் லேசான மழையும் பெய்யும். பின்னர் புதன்கிழமையும் மழை பெய்யும். காலையில் மழை இருக்காது. மாலை முதல் இரவு வரை கனமழைக்கு வாய்ப்புள்ளது.
நார்வே வானிலை மையம்
இது போல் வியாழக்கிழமை மாலையும் வெள்ளிக்கிழமையும் மாலை லேசான மழை பெய்யும். பின்னர் சனி, ஞாயிறு, திங்கள் என 28-ஆம் தேதி வரை லேசான மழை பெய்யும் என நார்வே வானிலை மையம் தெரிவித்துள்ளது.