நாளை முதல் வரும் 30-ஆம் தேதி வரை சென்னையில் மழைக்கு வாய்ப்பு- நார்வே சொன்ன நல்ல செய்தி!
சென்னை: நாளை முதல் வரும் அக்டோபர் 30-ஆம் தேதி வரை சென்னையில் மழைக்கு வாய்ப்புள்ளதாக நார்வே வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காலம் தொடங்கவுள்ளது. அது 25-ஆம் தேதிக்கு பிறகு தொடங்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. ஆனால் முன்னதாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கனமழை இன்று கொட்டியது.
சென்னையில் இன்று 1 மணிநேரத்திற்கும் மேலாக கனமழை கொட்டியது ஏன்?.. வானிலை மையம் விளக்கம்
சென்னையில் கனமழை
இந்த நிலையில் சென்னையில் கனமழை தொடரும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து நார்வே வானிலை மையம் கூறுகையில் இன்று இரவு 12 மணி முதல் நாளை கால 6 மணி வரை நல்ல மழை பெய்யும்.
கனமழை
அதுபோல் அக்டோபர் 24-ஆம் தேதி காலை 6 மணி முதல் 12 மணி வரை லேசான மழை பெய்யும். பின்னர் நண்பகல் 12 மணி முதல் மாலை 6 மணி வரை கனமழை பெய்யும். ஞாயிற்றுக்கிழமை காலை 5 மணி முதல் 11 மணி வரை கனமழை பெய்யும். அது போல் மாலை 5 மணிக்கு லேசான மழை பெய்யும்.
லேசானது முதல் கனமழை
வரும் திங்கள்கிழமை காலை லேசான மழை பெய்யும். பின்னர் பகல் 11 மணி முதல் மாலை 5 மணி வரை கனமழை பெய்யும். பின்னர் மழை படிப்படியாக குறையும். இதையடுத்து செவ்வாய்க்கிழமையும் லேசான மழைக்கு வாய்ப்புண்டு. புகன்கிழமை லேசான முதல் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
30-ஆம் தேதி வரை பெய்யும்
வியாழக்கிழமை 29ஆம் தேதியும் இதே நிலைதான். லேசானது முதல் அதிக கனமழை வரை பெய்யும். வெள்ளிக்கிழமையும் சனிக்கிழமையும் லேசான மழை பெய்யும் என நார்வே வானிலை மையம் தெரிவித்துள்ளது.நாளை முதல் ஒரு வாரத்திற்கு சென்னையில் மழை என்பதால் மக்கள் குடையுடன் செல்லுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.