சென்னை மக்களே! இன்று கனமழை கொட்டும்.. இந்த நேரங்களில் வீட்டை விட்டு வெளியே வராதீர்- நார்வே
Recommended Video
சென்னை: சென்னையில் இன்று கனமழை பெய்யும் என்றும் எந்தெந்த நேரங்களில் கனமழை பெய்யும் என்றும் நார்வே வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி சிறிது நாட்கள் மழை பெய்தது. இதையடுத்து மழை இல்லாமல் இருந்தது. எனினும் அவ்வப்போது வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வந்தது.
இந்த நிலையில் கடந்த புதன்கிழமை முதல் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. இதன் எதிரொலியாக புதன்கிழமை நள்ளிரவு முதல் விடிய விடிய சென்னை உள்ளிட்ட புறநகர் பகுதிகளில் கனமழை பெய்தது.
திரும்பி வந்த வடகிழக்கு பருவமழை.. தமிழகத்தில் 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்.. இந்திய வானிலை மையம்
வடகிழக்கு பருவமழை
இதில் அதிகபட்சமாக தாம்பரத்தில் மழை பெய்தது. முடிச்சூர், சேலையூர், தாம்பரம் உள்ளிட்ட பகுதிகளில் வீடுகளை வெள்ளநீர் சூழ்ந்தது. இதுகுறித்து சென்னை வானிலை மையம் கூறுகையில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்தது.
கனமழை
இதனால் நவம்பர் 30, டிசம்பர் 1, டிசம்பர் 2 ஆகிய தேதிகளில் சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்யும் என தெரிவித்துள்ளது. இந்த நிலையில் நேற்று இரவு முதல் சென்னை, காஞ்சிபுரம், கடலூர் உள்பட பல்வேறு பகுதிகளில் கனமழை கொட்டி தீர்த்தது.
கனமழைக்கு வாய்ப்பு
இன்று சில மணிநேரங்களில் சென்னையில் கனமழை பெய்யும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து நார்வே வானிலை மையம் கூறுகையில் காலை 10 மணி முதல் பகல் 1 மணி வரை பல்வேறு பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு.
மீண்டும் வெளுக்கும்
அதன் பிறகு மழையின் அளவு குறைந்து காணப்படும். பின்னர் இரவு 7 மணி முதல் 10 மணி வரை மீண்டும் மழை வெளுக்கும். இதைத் தொடர்ந்து மழையின் அளவு குறையும். ஆக இன்று நாள் முழுவதும் சென்னையில் மழை என நார்வே வானிலை மையம் குறிப்பிட்டுள்ளது.