4 நாள் டைம்.. பொள்ளாச்சி ஜெயராமன் மன்னிப்பு கேட்க வேண்டும்.. சபரீசன் வக்கீல் நோட்டீஸ்
பொள்ளாச்சி ஜெயராமன் மன்னிப்பு கேட்க வேண்டும் என சபரீசன் வக்கீல் நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.
Recommended Video
சென்னை: இன்னும் 4 நாள்தான் டைம்.. அதற்குள் பொள்ளாச்சி ஜெயராமன் தன்னை பற்றி தவறாக பேசியதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மருமகன் சபரீசன் வக்கீல் நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.
பொள்ளாச்சி பாலியல் கொடூர சம்பவம் தமிழகத்தையே உலுக்கிய நிலையில், அது சம்பந்தமாக சிபிசிஐடி விசரணை நடந்து வருகிறது.
இதனிடையே , "திமுக ஆதரவு இணையதளங்கள், சமூக வலைத்தளங்களில் தனது பெயருக்கு களங்கம் கற்பிக்கும் வகையில் அவதூறுகள் பதிவு செய்யப்படுகின்றன.
துணை சபாநாயகர்
இதெல்லாம் திமுக தலைவர் ஸ்டாலினின் மருமகன் சபரீசனின் தூண்டுதல் பேரில்தான் நடக்கிறது என்று துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் வெளிப்படையாக குற்றஞ்சாட்டியதுடன், போலீசிலும் புகார் அளித்திருந்தார்.
வக்கீல் நோட்டீஸ்
இதன் அடிப்படையில் சபரீசன் மீது சென்னை மயிலாப்பூர் போலீசாரும் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்நிலையில், சபரீசன் தரப்பில் இருந்து பொள்ளாச்சி ஜெயராமனுக்கு ஒரு வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அதில் சொல்லி இருப்பதாவது:
மன உளைச்சல்
பொள்ளாச்சி ஜெயராமனின் பேட்டியால் சபரீசன் மன உளைச்சல் அடைந்துள்ளார். பொள்ளாச்சி ஜெயராமன் தான் பேசியதற்கு பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும். அதேபோல, பொது வெளியில் பகிரங்கமாக பேசியவற்றை திரும்ப பெறுவதாக அறிவிக்க வேண்டும்.
மன்னிப்பு
இதற்கு 4 நாட்கள் கால அவகாசம். ஒருவேளை 4 நாட்களுக்குள் மன்னிப்பு கேட்கவில்லை என்றால், சட்டப்படி கிரிமினல் வழக்கு தொடரப்படும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.