தன்னம்பிக்கையோடும், தெளிவோடும் எதிர்கொள்ளுங்கள்.. +2 தேர்வெழுதும் மாணவர்களுக்கு சீமான் வாழ்த்து!
நாளை பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வெழுதும் மாணவர்களுக்கு நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சென்னை: நாளை பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வெழுதும் மாணவர்களுக்கு நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நாளை 12ம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறுகிறது. நாளை தொடங்கும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல்நாளில் தமிழ் பாடத்திற்கான தேர்வு நடைபெறவுள்ளது. தமிழகத்தில் மொத்தம் 8 லட்சத்து, ஆயிரத்து 401 மாணவர்கள் பொதுத்தேர்வினை எழுதுகின்றனர்.
இந்த தேர்விற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது. புதிய பாடத்திட்ட அடிப்படையில் மாணவர்கள் நாளை தேர்வு எழுதவுள்ளனர். இந்த நிலையில் பொதுத்தேர்வெழுதும் மாணவர்களுக்கு நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அதில், நாளை பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வெழுதும் நாளைய உலகத்தை மாற்றிப் படைக்க காத்திருக்கிற எனதன்பு தம்பி - தங்கையர் அனைவருக்கும் என்னுடைய மனம்நிறைந்த வாழ்த்துகள்!
நாளை பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வெழுதும் நாளைய உலகத்தை மாற்றிப் படைக்க காத்திருக்கிற எனதன்பு தம்பி – தங்கையர் அனைவருக்கும் என்னுடைய மனம்நிறைந்த வாழ்த்துகள்!
— சீமான் (@SeemanOfficial) March 1, 2020
தன்னம்பிக்கையோடும், உள்ளத்தெளிவோடும் தேர்வினை எதிர்கொள்ளுங்கள்! வென்று மென்மேலும் உயருங்கள்!
தன்னம்பிக்கையோடும், உள்ளத்தெளிவோடும் தேர்வினை எதிர்கொள்ளுங்கள்! வென்று மென்மேலும் உயருங்கள்!, என்று சீமான் தனது வாழ்த்தில் குறிப்பிட்டுள்ளார்.