தமாகா துணைத் தலைவர் கத்திப்பாரா ஜனார்த்தனன் மறைவு: ஒபிஎஸ் இரங்கல்
சென்னை: தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மாநிலத் துணைத் தலைவர் கத்திப்பாரா ஜனார்த்தனனின் மறைவுக்கு துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், "தமாகா கட்சியின் மாநிலத் துணைத் தலைவர் கத்திப்பாரா ஜனார்த்தனன் அவர்கள் மாரடைப்பு காரணமாக காலமானார் என்ற செய்தி அறிந்து மிகுந்த அதிர்ச்சியும் மனவேதனையும் அடைந்தேன்.
ஜனார்த்தனன் அவர்களது பிரிவால் மீளாத்துயரில் வாடும் அவர்தம் குடும்பத்தினருக்கும், தமாகா கட்சி தலைமைக்கும், தோழர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக் கொள்கிறேன்." இவ்வாறு கூறியுள்ளார்-
சென்னையில் மீண்டும் முழு ஊரடங்கு அமலாகிறதா? முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பதில்
இதேபோல் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே. வாசனும், கத்திப்பாரா ஜனார்த்தனனின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.