சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அதிமுகவில் சசிகலா சேர்க்கப்படுவாரா?.. வாக்கு எண்ணிக்கை நாளில் ஓ.பி.எஸ் சொன்ன அதிரடி பதில்!

அதிமுகவில் சசிகலா சேர்க்கப்படுவாரா என்பது குறித்த கேள்விக்கு துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் பதில் அளித்துள்ளார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    அதிமுகவில் சசிகலாவை சேர்ப்பது குறித்து கட்சிதான் முடிவு எடுக்கும்.. ஓபிஎஸ் அதிரடி பதில்

    சென்னை: அதிமுகவில் சசிகலா சேர்க்கப்படுவாரா என்பது குறித்த கேள்விக்கு துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பதில் அளித்துள்ளார்.

    விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகி வருகிறது. விக்கிரவாண்டி தொகுதியில் அதிமுக வேட்பாளர் முத்தமிழ்ச்செல்வன் 16706 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகிக்கிறார்.

    விக்கிரவாண்டியில் அதிமுக வேட்பாளர் முத்தமிழ் செல்வன் 44960 வாக்குகள் பெற்றுள்ளார். திமுக வேட்பாளர் புகழேந்தி 28254 வாக்குகள் பெற்றுள்ளார். நாங்குநேரியில் அதிமுக வேட்பாளர் ரெட்டியார்பட்டி நாராயணன் 3033 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகிக்கிறார்.

    நாங்குநேரியில் காங்கிரஸ் பின்னடைவு.. எப்படி நடந்தது மாற்றம்.. அதிமுக வெற்றிக்கு உதவிய 6 காரணங்கள்!நாங்குநேரியில் காங்கிரஸ் பின்னடைவு.. எப்படி நடந்தது மாற்றம்.. அதிமுக வெற்றிக்கு உதவிய 6 காரணங்கள்!

    வெற்றி எப்படி

    வெற்றி எப்படி

    இந்த நிலையில் துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தேர்தல் வெற்றி குறித்து சென்னையில் பேட்டி அளித்தார். அதில், இடைத்தேர்தலில் ஆதரவு அளித்த மக்களுக்கு நன்றி.உள்ளாட்சி தேர்தலிலும் அதிமுகதான் வெற்றிபெறும். உள்ளாட்சி தேர்தல் டிசம்பர் மாதத்திற்குள் நடக்கும்.

    மக்கள் அளிக்கும் தீர்ப்பு

    மக்கள் அளிக்கும் தீர்ப்பு

    இது மக்கள் அளித்த தீர்ப்பு. மக்கள் அதிமுக ஆட்சி மீது நம்பிக்கை வைத்து இருக்கிறார்கள். அதனால் எங்களுக்கு அவர்கள் வாக்களித்து இடைத்தேர்தலில் வெல்ல வைத்து இருக்கிறார்கள்.

    திமுக எப்படி

    திமுக எப்படி

    திமுகவின் பொய்களை மக்கள் நம்பவில்லை. திமுகவை மக்கள் புறக்கணித்துவிட்டார்கள் என்பது இடைத்தேர்தல் முடிவு மூலம் தெரிகிறது. எங்களுக்கு ஆதரவு அளித்த கூட்டணி கட்சிகளுக்கு நன்றி.

    அதிமுக சசிகலா

    அதிமுக சசிகலா

    அதிமுகவில் சசிகலாவை சேர்ப்பது குறித்து கட்சிதான் முடிவு எடுக்கும். டிடிவி தினகரன் குறித்தும் கட்சிதான் முடிவு செய்யும். கட்சியின் பொதுக்குழுதான் சசிகலா குறித்து முடிவு எடுக்கும், என்று துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

    English summary
    Deputy CM O Paneerselvam speaks about Sasikala on the day of Nanguneri, Vikravandi By Election Results.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X