சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

இந்த புலியை கூண்டில் அடைத்தால் பாசமா இருக்குமா.. கருணாஸ் சிறையில் இருந்ததை கலாய்த்த ஓபிஸ்!

Google Oneindia Tamil News

சென்னை: இந்தப் புலியை கூண்டில் அடைத்தாலும் பாசமாக இருக்குமா என கருணாஸை துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் கலாய்த்தார்.

தமிழக சட்டசபை கடந்த 8-ஆம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்தது. இதையடுத்து நேற்று முதல் பட்ஜெட் மீதான விவாதம் தொடங்கி நடைபெற்று வருகிறது.

O. PaneerSelvam teases Karunas MLA for his tiger comment

அப்போது பேசிய எம்எல்ஏ கருணாஸ், நான் பாசப்புலி, முக்குலத்தோர் புலி என்றார் . அதற்கு துணை முதல்வர் ஓபிஎஸ்ஸோ இந்த புலியை கூண்டில் அடைத்தாலும் இதே பாசத்துடன் இருக்குமா என கேள்வி எழுப்பினார். அப்போது அவையில் சிரிப்பலை எழுந்தது.

முதல்வரையும் போலீஸாரையும் கடுமையாக விமர்சனம் செய்து கருணாஸ் பேசினார். இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டு வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டவுடன் அதிமுகவை கடுமையாக விமர்சனம் செய்து பேசினார்.

கூவத்தூர் உண்மைகளை உயர்நீதிமன்ற நீதிபதி என்னிடம் கேட்டால் மொத்த உண்மையையும் சொல்வேன் என அரசுக்கு பூச்சாண்டி காண்பித்தார். இதை நினைவுப்படுத்தும் வகையில் கருணாஸை கூண்டில் அடைத்தாலும் புலி பாசம் காட்டுமா என கேட்டார்.

English summary
Deputy Speaker O.Paneerselvam teases MLA Karunas for his tiger comment.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X