உணர்வின் ஊற்று.. ஆற்றலின் தூண்டுகோல்.. எங்கள் அம்மா.. பட்ஜெட்டில் ஓ.பி.எஸ். புகழாரம்
பட்ஜெட் வாசிக்க தொடங்குமுன்பு ஜெயலலிதாவுக்கு ஓ.பி.எஸ். புகழாரம் சூட்டினார்.
சென்னை: பட்ஜெட் தாக்கலுக்கு முன்பு ஜெயலலிதா புகழ் பாடி அதிமுகவினரிடம் மேசைத் தட்டு வாங்கி அசத்தி விட்டார் நிதியமைச்சரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம்.
வழக்கம் போல மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு புகழாரம் சூட்டித்தான் ஓ.பன்னீர் செல்வம் தனது பட்ஜெட் பேச்சை ஆரம்பித்தார்.
ஓபிஎஸ். பட்ஜெட் அறிவிப்பை வாசிக்கும் முன் ஜெயலலிதாவுக்கு சூட்டிய புகழாரம் ஒரே வாக்கியம் என்றாலும் பெரும் வாக்கியமாக இருந்தது.
"மக்களால் நான் - மக்களுக்காகவே நான் என்று தமிழக மக்களின் நலனுக்காகவும், தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்காகவும் தன்னை முழுமையாக அர்ப்பணித்து, மக்கள் தொண்டே மகேசன் தொண்டு என்று தன்னலம் கருதாமல் அல்லும் பகலும் உயராது உழைத்து, தமிழக மக்களின் நெஞ்சங்களில் மறைந்தும் மறையாமல் என்றும் வாழ்பவர், எங்கள் உங்களில் உணர்வின் ஊற்றாகவும் ஆறற்லின் தூண்டுகோலாகவும் எங்களை வழி நடத்தும் போராளியாகவும், அவர் உழைப்பார் அமைத்து தந்த இந்த நல்லாட்சியின் காவல் தெய்வமாகவும், விளங்கிவரும் மறைந்த முன்னாள் முதலமைச்சர் இதயதெய்வம் புரட்சி தலைவி ஜெ.ஜெயலலிதா அவர்கள் காட்டிய நல்வழியில், எதிரிகளின் சூழ்ச்சிகளை முறியடித்து வெற்றிகரமாக அம்மா அவர்களின் ஆட்சியை மாண்புமிகு முதலமைச்சர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் சிறப்பாக தொடர்ந்து நடத்தி வருகிறார்" என்றார்.