கடையில் பிரியாணி சாப்பிட்டா காசு கொடுக்கனுமா கொடுக்க கூடாதா.. நீங்க சொல்லுங்க.. ஓபிஎஸ் கடும் தாக்கு
சென்னை: கடையில் பிரியாணி , பரோட்டா சாப்பிட்டால் காசு கொடுக்கனுமா , கொடுக்க கூடாதா என்று திமுகவினரை ஓ.பன்னீர்செல்வம் கலாய்த்தார்.
சென்னை நாடாளுமன்ற வேட்பாளர் சாம்பால் , வட சென்னை நாடாளுமன்ற வேட்பாளர் அழகாபுரம் மோகன்ராஜ் ஆகியோரை ஆதரித்து துணை முதல்வர் ஓ.பி.எஸ். சென்னை புளியந்தோப்பு பகுதியில் பிரசாரத்தில் ஈடுபட்டார்.
அப்போது அமைச்சர் ஜெயக்குமார் உடனிருந்தார். வாகனத்தில் இருந்தவாறு பேசிய துணை முதலமைச்சர் ஓ.பி.எஸ், தமிழகத்தை ஓ.பி.எஸ், ஈ.பி.எஸ் தான் தீ வைத்து கொளுத்தியதாக மு.க ஸ்டாலின் கூறுகிறார்.
ஆனால் நீங்கள் தான் மாமன் , மச்சான் பிரச்சனையில் தினகரன் அலுவலகத்தை தீ வைத்து எரித்தீர்கள். இந்த வழக்கில் குற்றவாளிகளுக்கு தீர்ப்பும் வந்துள்ளது.
எங்காச்சும் தனக்குத்தானே ஆரத்தி எடுத்து பொட்டையும் வச்சுப்பாங்களா.. தமிழிசைக்கு நடந்திருக்கே!
கடையில் பிரியாணி சாப்பிட்டால், பரோட்டா சாப்பிட்டால் காசு கொடுக்க வேண்டுமா , கொடுக்க கூடாதா. காசு கேட்டால் கடைக்காரரை அடிப்பது இதை தான் திமுகவினர் செய்து வருகின்றனர். சிறுபான்மை மக்கள் பாதுகாப்பாக இருக்கும் ஒரே மாநிலம் தமிழகம் தான் என்று கூறினார்.