டிடிவி தினகரனை நான் கூப்பிடவே இல்லீங்க…? அத்தனையும் பொய்… திடமாக மறுக்கும் ஓபிஎஸ்
Recommended Video
சென்னை: டிடிவி தினகரனுக்கு நான் அழைப்பு விடுத்ததாக ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்தி தவறான தகவல் என்று துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் மறுப்பு தெரிவித்துள்ளார்.
தமிழக துணை முதல்வரான ஓ. பன்னீர்செல்வம், அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரனுக்கு அழைப்பு விடுத்ததாக பல்வேறு வதந்திகள் பரவி வருகின்றன. இந் நிலையில், இதுகுறித்து பன்னீர் செல்வம் தமது டிவிட்டர் பக்கத்தில் கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது:டிடிவி தினகரனுக்கு நான் அழைப்பு விடுத்ததாக ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்தி தவறான தகவல். 18 எம்எல்ஏக்களில் பலர் கழகத்தில் மீண்டும் இணைய விரும்புகின்றனர்.
அவர்களுக்கு அழைப்பு என்றுதான் கூறியிருந்தேன். உண்மைக்கு புறம்பாக பரப்பப்படும் தகவல்களை யாரும் நம்பவேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன் என்று அவர் கூறியுள்ளார்.
டிடிவி தினகரனுக்கு நான் அழைப்பு விடுத்ததாக ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்தி தவறான தகவல்.
— O Panneerselvam (@OfficeOfOPS) February 9, 2019
18 MLAக்களில் பலர் கழகத்தில் மீண்டும் இணைய விரும்புகின்றனர், அவர்களுக்கு அழைப்பு என்றுதான் கூறியிருந்தேன்.
உண்மைக்கு புறம்பாக பரப்பப்படும் தகவல்களை யாரும் நம்பவேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன்.