துணை முதல்வர் ஓ.பி.எஸ், மு.க.ஸ்டாலினுக்கான மத்திய பாதுகாப்பு படை வாபஸ்
சென்னை: தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் ஆகியோருக்கு வழங்கப்பட்டு வந்த மத்திய பாதுகாப்பு படை வாபஸ் பெறப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
முக்கிய தலைவர்களுக்கு சிறப்பு பாதுகாப்பு அளிப்பது தொடர்பாக மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் மற்றும் காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி குடும்பத்தினருக்கு வழங்கப்பட்ட எஸ்பிஜி பாதுகாப்பு படை விலக்கப்பட்டது.
நாட்டின் பிரதமர் மற்றும் அவரது குடும்பத்தினருக்குத்தான் எஸ்பிஜி பாதுகாப்பு எனப்படும் கறுப்பு பூனைப்படை பாதுகாப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இது நாடாளுமன்றத்தில் பெரும் விவாதத்தை கிளப்பியது.
இந்த நிலையில் தமிழக துணை முதல்வர் ஓ.பி.எஸ், எதிர்க்கட்சித் தலைவரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் ஆகியோருக்கான மத்திய பாதுகாப்பு படையின் ஒய் பிரிவு பாதுகாப்பு விலக்கிக் கொள்ளப்படுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
தமிழக பயங்கரவாதி ஜாபர் அலியை மடக்கி தூக்கிய குஜராத் போலீஸ்- ஒரே நாளில் 4 பேர் கைது!